Thursday, July 15, 2010

தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா? - கொளத்தூர் மணி

நன்றி: பெரியார் முழக்கம் ‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு? விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது.
தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.  ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது.
அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் - தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் - திராவிடம்’ பற்றி அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற கருத்துக்களை நாம் உரிய வகையில் விளக்கவும், அப்பொய்மைகளை அம்பலப்படுத்தவுமான கடமை நமக்கு உண்டு; நமக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இதை நாம் எழுதலானோம்.
தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.
ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.
ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல. கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.
ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு. ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.
பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.
‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.
தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.
‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான். அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?
இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.
இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!
- கொளத்தூர் தா.செ. மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்                                              
Comments (15)
  • thoppulkodiyedhiri
    ayya kolathur maniyin vilakkam unmaiyaana tamizhar anaivarukkum yearppudaiyadhe! aanaal KOVAI RAMAKRISHNAN, SARASVATHI, VAIKKO ULLITTA URAVUGALAI naam thozhargalaagaththaan(che kuvaraa) paarkkiroam adharkkaga matra TELUNGAN, MALAYALI, KANNADAN , MAARVAADI ULLITTA anaivarum tharppodhu tamizharin mannurimaiyai parippadhai mearkkanda unmaiththozhargalai kaaranam kaattiye TAMIZHARIN URIMAIGALAI PARIKOTUPPADHAA? IPPODHU TELUNGAN SUDHARSANAM sattasabaiyil TELUNKIL PEASUVEAN YENA ADAMBIDIKKIRAAN porapokkil tamizhnaadu sattamandram DHIRAAVIDA SATTAMANRAM AANAALUM AATCHIRIYA PADA VEANDIYADHILLAI...
  • ezhil
    என்னது ஆதி தமிழர் பேரவை ஆதரவா ? அது ஒரு சாதீய அமைப்பு தானே ? அதுவும் தெலுங்கு வந்தேறிகளை தமிழர்கள் என்று எப்படி அழைக்க முடியும் .பெரியார் தி.க ஒரு தெலுங்கு வந்தேறிகளின் அமைப்பு என்பது இதில் இருந்தே புலனாகிறது சீமானை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது திராவிடம் பேசி தமிழ் நாட்டின் உரிமைகளை தெலுங்கனிடமும்,கண்னடத்தானிடமும் அடகு வைக்க முயலும் தமழினத்துரோகிகளே தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்
  • ravanan
    kolathur mani ayya avargal kooriyadhu mutrilum unmai.
  • முகமது பாருக்
    'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என பாப்பாத்தி ஜெயலிதாவிற்கு வாக்கு கேட்ட சீமான் போன்ற மேடை பேச்சாளரை நம்பும் ** ***** கூட்டம் பெரியார் திராவிடர் கலகத்தை பற்றி பேச அருகதை அற்றவர்கள்.. மேலும் மலையாளி, கன்னடனை மற்றும் தெலுங்கர்களை எதிர்க்கும் இந்த கூட்டம் சமசுகிரதத்தை தாய்மொழியாக கொண்ட பார்ப்பன கூட்டத்தை மட்டும் எதிர்க்காதது ஏனோ????? தமிழர்களின் (திராவிடர்களின்) உரிமைக்காகவும், இன எழுச்சிக்காகவும் பல போராட்டங்களையும் தன் எழுச்சியாக நடத்தி சாதி ஒழிப்பும், பார்ப்பீனிய கலாச்சார ஒழிப்புமே தமிழ் தேசியத்தின் மையப் புள்ளி என்பதை தெளிவுபடுத்தி போராடுபவர்களை குறை கூற ஒருவருக்கும் தகுதியில்லை.. புலம்பெயர்ந்த பிழைப்புவாதிகளையும் தமிழ் நாட்டில் ஆதிக்க சாதியையும் நம்பி பிழைப்பு நடத்த பார்க்கும் திரைக் கூத்தாடி சீமானை எல்லாம் நம்பும் கூட்டத்தை என்ன செய்வது... இதெல்லாம் ஒரு பிழைப்பு???????? தமிழ் தேசியம் என்ற பெயரில் சாதி தேசியமும் சைவ தேசியமும் பேசித்திரியும் பிழைப்புவாத கூட்டங்களை ஒழித்தால்தான் தமிழ்நாட்டிற்கு விடிவு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோசத்தை கூட கூறப்பயப்படும் கூட்டம் ஈழம் வாங்கித்தர போராடுவார்களாம் என்ன கொடுமைங்க.. 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாவதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என்ற கதைதான் இந்த கூத்தாடிக் கும்பலுக்கும்..
  • முகமது பாருக்
    மன்னிக்க எழுத்து பிழைக்கு, 'கழகம்' மற்றும் 'முடியாதவன்' எனக் கொள்க..
  • parava
    aneethiyay kandu kothithal neeyum en tholan endra che-guera vin varayarai than poralikum thalaivanukkum aana ilakkanam. seeman stunt adippathu pirappai thondum thamil paarpaniyamae. moola muthal aathi thamilar aana parayarai muthalvaraakka seeman thayaara?
  • seemaanin thambi
    பார்ப்பான். பார்ப்பன எதிர்ப்பு,ஆதரவு பொருத்தமட்டில் 3 நிலைகளாக பிரிக்கலாம் 1)பார்பனனை ஆதரிப்பது 2)பார்ப்பனனும் உறுப்பினராய் உள்ள அமைப்புகளை ஆதரிப்பது.3)பார்ப்பனனை ஏற்றுக்கொள்வது .இதில் பெதிக 3வது நிலையைதவிர முதல் இரண்டு நிலைகளை செய்துதான் வந்திருக்கிறது.அதிலும் தெளிவின்மையும் குழப்பமுமே இருக்கிறது.பாப்பாத்தி ஜெவை ஆதரிப்பது,பார்ப்பனன் என்பதால் மட்டுமே ராமநாதன்,எஸ்.வீ.சேகரை எதிர்ப்பது,பார்பனர்கள் உறுப்பினராய் உள்ள புலிகளை ஆதரிப்பது,பார்ப்பனர்களை உறுப்பினராய் கூட சேர்த்தமாட்டோம் எனகூறும் வி.சி.ரவிசந்திரனை எதிர்ப்பது.காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் இதிலிருந்து என்ன தெரிகிறது?ஒருவரை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ பார்ப்பான், பார்ப்பானை உளடக்கிய அமைப்பு என்றெல்லம் பெதிக உறுதியாக பார்ப்பதில்லை.அப்போதைய சூழழுக்கு தகுந்தமாதிரி முடிவெடுக்கிறது.இந்தநிலையில் தோழர் சீமானை வேண்டுமென்றே குற்றம் சுமத்தவேண்டும் என்கிறகாரணத்தினால்தான் பார்ப்பன பூச்சாண்டி காட்டுகிறார்கள் பெதிகவினர்.தான்மட்டும் எப்படி வேண்டுமானல் முடிவெடுக்கலாம் யாரும் கேட்க முடியாது தான்தான் பெரியாருக்கு காப்பி ரைட் வாங்கியதாக எண்ணமா?வீரமணிக்கு சொன்னது தனக்கும் பொருந்தும் என்பதை பெதிகவினர் ஏன்சுலபமாக மறந்துபோயினர்.அய்யா சொன்னார்,''எனக்கு பிறகு யார் வாரிசு என்று கேட்டால் என் புத்தகங்களும்,சிந்தனைகளுமே'' என்றார்.பெரியாரின் புத்தகமும்,சிந்தனைகளும் என்ன சொல்கிறது என்றசாரத்தை பிறகு பார்ப்போம்.தோழர் சீமான் அன்றிலிருந்து இன்று வரை சமரசமற்ற ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர்தான்.அந்தநிலைப்பாட்டில் சிறிதும் வழுவாமல் இருக்கிறார்.பார்ப்பனக்கேட்டை இன்னமும் மேடைகளில் தொடர்ந்து முழங்கிகொண்டுதான் இருக்கிறர்ர்.தேவைப்பட்டால் ஒலிப்பேழைகளை அனுப்பிவைக்கிறோம்.ஒருபோதும் பார்ப்பனர்களை நாம் தமிழர் அமைப்பில் சேர்த்தமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளார்.ஆனால் அந்தநிலைப்பாட்டிற்க்காக பெதிக ஆதிரிக்கும் என்று உறுதியில்லை. காரணங்கள் மேலே சொல்ல பட்டிருக்கிறது.கொள்கை முடிவுகள் எடுக்காமல் தனிமனித விருப்பு வெருப்பு அடிப்படையில் முடிவெடுக்கும் பெதிக சீமானை குறைசொல்லமட்டும் பார்ப்பனனை பயன்படுத்துவது நியாயமா? தெலுங்கர்-கன்னடர்-தமிழர் அண்டை தேசிய இனங்களின் தமிழர் விரோத நடவடிக்கைகளை பேசினால் பார்ப்பான் தப்பித்துக்கொள்வான் என்று சொல்லுவதால் அவர்களை பேசவே கூடாது என்கிறார்களா?அண்டை தேசிய இனங்கள் தமிழகத்தை பாலைவனமாக்க தொடர்ந்து நதிநீர் ஆற்று உரிமைகளை மறுத்துவருகிறது.முதலில் கர்னாடகா,பிறகு ஆந்திரா,இப்போது கேரளா.இவர்களை என்ன செய்வது.இன்னமும் மோசமாக கர்னாடகாவில் தமிழனின் உயிர் வாழும் உரிமையயும்கூட மறுக்கும் கன்னட வெறியர்களை பேசவேகூடாதா?தெலுங்கனின் திமிரை பேசினால் உடனே மரியாதைக்குரிய கோவை கு.ரா. அவர்களை இவரும் தெலுங்கர்தானே அப்போ இவரையும் எதிர்க்கிறீர்களா?என்றுகேட்டு அவரை பெதிகவினர்தான் மிகவும் மலிவான முறையில் கொச்சையும் இழிவும் படுத்துகிறார்கள்.அவர் ஈழவிடுதலையில் மாபெரும் தியாகம் செய்தவர்.சாதிமறுப்பு திருமணம் செய்தவர்.பெரியாரின் பெரும் தொண்டர்.அவர்கள் தியாகத்தால் விதிவிலக்கானவர்கள்.(extraordinaries are not examples)அவரை ஏதோ தெலுங்கர் சாதி தலைவர்போல பெதிக காட்ட முனைவது ஏன்?கு.ரா. அண்ணன் செய்த தியாகத்தினால் காமாச்சி நாயுடு போன்ற போன்ற தமிழ் நாட்டில் பொறுக்கி தின்னும் தெலுங்கு வெறியனை தமிழன் தலையில் தூக்கி ஆடவேண்டுமா?பெரியார் அவரே சொல்லுவார் தான் ஒரு கன்னடன் என்று. அதற்க்காக தமிழர்கள் கன்னடனுக்கு பல்லக்கு தூக்குங்கள் என்றாசொன்னார்?.கன்னடனும் தெலுங்கனும் மலையாளத்தானும் ஒழிந்தார்கள்.ரொம்ப சந்தோசம் என்று மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது சொன்னார்.இன்னமும் மீதமிருக்கும் தமிழின விரோத கன்னட,தெலுங்கனை ஒழிப்போம் என்றா சீமான் சொன்னார்?.அல்ல.தமிழின விரோத கன்னட,தெலுங்கர்களை அதிகாரத்திற்க்கு வர விடமாட்டோம் என்றுதான் சொல்லுகிறார்.இதிலென்ன தவறு?உடனே தமிழன் என்று தேடி கிளம்பிவிட்டார்கள்,சு.சாமி,சிதம்பரம்,நாராயணசாமி இவர்களை தமிழர்கள் என்று சொல்லுவார்கள் என்று நகைச்சுவை செய்கிறார்கள்.தைரியமாக சொல்லுவோம் சிதம்பரம்,நாரயணசாமி,தங்கபாலு,பெதிக மேடைகளில் பேசிய ஈ.வி.கே.எஸ் அணைவரும் பச்சை தமிழர்கள்தான்.ஆனால் மன்னிக்கவேமுடியாத தமிழின துரோகிகள்.இதில் சு.சாமி எங்கெ வந்தான்?. ஏதும் தெரியாதது போல் கேட்கிறார்கள்.பார்ப்பான் ஒருபோதும் தமிழன்ல்ல.தமிழன் ஆகமுடியாது.தோழர் சீமானின் நிலைப்பாடும் அதுதான்.இப்படியும் கேட்கலாமே திராவிடனை ஆதரிக்கிறோம் என்பதால் வட்டாள் நாகராஜயும்,அச்சுதானந்தனையும் ஆதரிக்கிறோம் என்று சொல்ல முடியுமா? பெரியார். பெரியார் புத்தகங்களும்,சிந்தனையும் சாரமாக என்னசொல்லுகிறது?''சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு''இதுதானே.சுயமரியாதைக்கு தடையாய் இருக்கும் சாதியை ஒழி,அதற்க்கு தடையாய் இருக்கும் இந்து மதத்தை ஒழி,அதற்க்கு தடையாய் இருக்கும் பார்ப்பானை ஒழி.தமிழனின் சுயமரியாதைக்கும் சுகவாழ்விற்க்கும் தடையாய் இருக்கும் இந்திய அடிமைத்தனத்தை ஒழி.தனித்தமிழ்நாட்டிற்க்கு தடையாய் இருக்கும் இந்திய ஒற்றுமையை ஒழி,பெண்ணின் சுயமரியாதைக்கும் சுக வாழ்விற்க்கும் தடையாய் இருக்கும் ஆணாதிக்கத்தை ஓழி. இதற்க்காக அய்யா பல்வேறுவடிவங்களில் போராட்டம் நடத்தினார்.போராட்ட வடிவங்களை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிகொண்டே இருந்தார்.இதெல்லாம் பெதிக விற்க்குதெரியாததல்ல,நாம் சொல்ல.அய்யாவின் சொற்களை மனனம் செய்து ஒப்பிப்பதா பெரியாரியல் வழி.அய்யாவின் சொற்களை ஏன் சொன்னார், எதற்க்கு சொன்னார், எந்த இடத்தில் சொன்னார், என்பதெல்லாம் இல்லாமல் முன் சொன்னதை பின் சொன்னதை தன் சொந்த விருப்பு வெறுப்புக்காக வெட்டி எடிட்செய்து(இடைசெருகல் இதுவரை இல்லை.அது முடியவும் முடியாது என்று தெரிந்ததால்)ஒரு சிலர் அதி மேதாவிகள் போல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.அய்யா சென்னை மாகாணமாக இருந்தபோது பேசியது,1947 ஆட்சி மாற்றதிற்க்கு பிறகு பேசியது,மொழி வாரி மாகாணங்கள் பிரிவுக்கு பின் பேசியது என்று பிரித்து பார்த்தால்தான் அவரின் தனி தமிழ்நாடு குறித்த பார்வயை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும்.பெரியாரியம் என்பது வேதமல்ல,பெரியார் கடவுளுமல்ல.இதைசொல்ல பெரியாரை படித்தாலே போதும்.பெரியாரியம் என்பது.ஒரு சிக்குலுக்கான தீர்வல்ல.அது சிக்கலை எப்படி தீர்ப்பது என்கிற அறிவியல்.ஏனென்றால் ஒருசிக்கல் ஒரு தீர்வு என்றானால் சிக்கல் முடிந்தவுடன் அதன் தேவை இல்லாமல் போய்விடும்.இன்றும் பெரியாரியம் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறதென்றால் காரணம் இரண்டு 1)பெரியார் காலத்தில் இருந்த சிக்கல்கள் இன்னமும் தீர்க்கபடவில்லை.2)அது புது வடிவங்களை எடுத்தால் அதை கண்டுபிடித்து ஒழிக்க பெரியாரியம் கொடுக்கும் அறிவு. யாருக்காக காலம் முழுவதும் அய்யா பாடுபட்டார் தமிழருக்காகத்தானே? திராவிடனுக்காக இல்லையே?பார்ப்பான் வந்து புகுந்து விடுவான் என்கிற காரணத்துக்காக மட்டும் தானே தமிழனை திராவிடன் என்று அழைக்க நேர்ந்தது என்பார்.அதுஒரு குறியீட்டு பெயர்தானே?வெறும் பெயரருக்கு முக்கியம் கொடுத்து கன்னடனையும் தெலுங்கனையும் மலையாளத்தானையும் திராவிடன் என்று சொல்லி கொண்டு தமிழன் என்று சொல்பவனை அவனுக்காக போராடுபவனை தோழர் சீமானை குறைசொல்லுவது.பெரியாரை கொச்சை படுத்துவது ஆகாதா?அவர் வார்த்தையில் சொன்னால் அறிவு நாணயமா? தங்க ஊசியா சீமான்? யார் கண்ணையும் குத்த தோழர் சீமான் ஒன்றும் தங்க ஊசியல்ல.போர்வாள்..அது த்மிழின பகைவர்களின் வாலை ஒட்ட வெட்டும்.ஓட ஓட வெட்டும்.அவர் ஒரு பெரியாரின் பேரன்.தமிழர்களின் போர்க்குரல்.இளைஞர்களின் நம்பிக்கை.''சொல்லுக்கு முன் செயல்''என்கிற தேசியதலைவரின் வார்த்தைக்கேற்ப செயலே எதையும் நிரூபிக்கும்.செயலால் நாம் தமிழர் இயக்கம் தன்னை நிரூபிக்கும் போது பார்ப்பாத்தி ஜெவையே ஆதரித்தவர்கள்(தனிமனித விருப்பு வெருப்பு இன்றி முடிவெடுத்தால்),நாம் தமிழர் இயக்கத்தை நிச்சயம் ஆதரிக்கும் நிலையே வரும். அழிவு வேலைக்கரனுக்கு பதில்: தோழர் சீமானை எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கற்பனையயும்,பொய்யயும் கலந்து மூன்றாம் தரமாக சில குற்றச்சாட்டை சொல்கிறார்.இவர் பெதிக பொறுப்பில் உள்ளவர் என்று அறிகிறோம்.அதனால் பதில் எழுதவேண்டியது அவசியமாகிறது.4ம் கட்ட இறுதி போரின் போது உண்ணாவிரதம் இருந்த தோழர் கல்யாணியின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது யார்?உண்ணாவிரதம் பெரியார் வழி போராட்டம் இல்லை என்றாலும் அவர்களின் நோக்கம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை.உடல் நிலை மிகவும் மோசமாகவும், இருக்க இடமில்லாமல் மதிமுக அலுவலகத்தில் பல நடைமுறை சிக்கலுடன் தளராது போராடிய அந்த பெண் தோழர்களின் தியாகம் பெரிதுதான். ஆனால் அந்த உண்ணவிரததை முடித்து வைக்க பின்னாளில் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி கொண்டாடியவரும்,தமிழனை கொல்ல பெரிதும் துணை நின்ற கருணாநிதியின் மகள் கனிமொழியா கிடைத்தார். யார் கனிமொழியுடன் உறவாடியது யார்? 4ம் கட்ட இன அழிப்பின் ரத்தசுவடு காயாத நிலையில் ஈரோட்டில் ஈழத்திற்க்கு துரோகம் செய்த கள்ள பாதிரி கஸ்பர் ராஜ்.கனிமொழி கும்பலிடம்(மூட நம்பிக்கை எதிர்த்த விழிப்புணர்வு ஊர்வலம் போனதும் திரும்பியிருக்கலாமே?) வரிசையில் நின்று பொன்னாடை வாங்கியது யார்? பெதிக மாநில பொறுப்பாளர் மரியாதைக்குரிய ஆறுச்சாமி அவர்களும், பெதிக ஈரோடு மாவட்ட செயலாளர் இளங்கோவனும் அல்லவா? புகைப்படம் வேண்டுமா? ஆதாரத்துடன் தவறு செய்துவிட்டு கனிமொழியுடன் தொடர்பு என எந்தவித வெட்கமும் இல்லாமல் சொல்ல எப்படி முடிகிறது? ஆதாரம் உண்டா? இன்மொரு பொய் பெதிகவில் தெலுங்கர் ஆதிக்கம் இல்லை என்பது. சவால் விடலாமா? 32 மாவட்டங்களில் பெதிக இயங்கும் மாவட்டங்களில் மட்டும் பொறுப்புகளில் உள்ள மா.செ.,பொருளாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இவர்களின் பெயரையும் தமிழரா தெலுங்கரா என்ற நிலையையும் பட்டியல் போடலாமா? சுய பரிசோதனை செய்து பாருங்கள். அப்படியே உங்கள் வார்த்தைபடி இல்லையென்றால்(அது உண்மையல்ல) தெலுங்கரும் திராவிடர்தான்,இருந்தால் என்ன தவறு என்று கேட்கும் தைரியம் ஏன் இல்லை.? அம்பலபட்டு போய்விடுவோம் என்று பயமா? இன்னுமொரு கூடுதல் கேள்வி. சாதி ஒழிப்பு இயக்கமான பெதிகவில் சாதாரண அரசு இட ஒதுக்கீடான் 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு பதவிகளில் வழங்கபட்டுள்ளதா? ஏன் இல்லை? தகுதி திறமை இல்லையா? தேவையானால் விளக்கம் போதவில்லையென்றால் மீண்டும் கொடுப்போம்.
  • திராவிடத்தால் வீழ்ந்தோம்
    "இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான், கன்னடன் கன்னடனாக வாழ்கிறான் தெலுங்கன் தெலுங்கனாக வாழ்கிறான், மலையாளி மலையாளியாக வாழ்கிறான், நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி"- "ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக்கொள்கை. ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப்பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகளாகும்."- "எந்த ஒரு ஆரியப்படைஎடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்ததுண்டா?" "வள்ளுவமும் அதன் எதிர்மறையாகத்தோன்றிய பார்ப்பனியமும் தெற்கில் தோன்றியவை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கி ப்பரக்க நெடுக்க பயணம் போன சாதிவெறிக்கொள்கையே பார்ப்பனியம் ஆனால் கலப்பினக்கொள்கையாகிய ஆரியமெனும் நிறவெறிக்கொள்கையோ வடக்கில் தோன்றித் தெற்கே வந்தது. "- "பார்ப்பனியக்கொடுநெறிகளை ச்சட்ட வடிவமாக்கிய மனு நூல் ஆரியரால் ஆக்கப்பட்டதன்று. சாளுக்கியர் என்னும் கன்னடப்பேரரசாளர் - ஆக்கிய நூலே. ( கி.பி அய்ந்தாம் நூற்ராண்டு இரண்டாம் புலிகேசி ஆளுகையின் போது) " "தமிழும் தமிழரினமும் ஆரியப்படைஎடுப்பால் கெட்டனவா,திராவிடராம் கன்னடர் தெலுங்கர் மராத்தியர் ஆகியோரால் கெட்டனவா? "திராவிடராம், கன்னடரும் தெலுங்கரும் , மலையாளிகளும் தமிழகத்தில் ஊடுருவி மண்பறிப்பு வடிவில் மடிபறிப்பு ச்செய்ததுடன் தமிழகத்தின் எல்லையோரங்களிலுள்ள பச்சைத் தமிழ்ப்பகுதிகளையெல்லாம் தத்தம் குடியேற்றங்களாக ஆக்கிக்கொண்டனர்." "தமிழ் பார்ர்ப்பனரெல்லாம் தங்களை ஆரியர் என்று நம்பிக்கெட்டனர். வழியும் தெரியாது வரலாறும் தெரியாது, தமிழரினத்திடமிருந்து அயன்மையாகி வேரற்று நிற்கின்றனர். அத்துடன் பெரியாரின் திராவிடக்கொள்கையும் பார்ப்பனரெதிர்ப்பும் சேர்ந்து அவர்களை மீளாமுடியாப்படுகுழியில் தள்ளின" "தமிழ்ப்பார்ப்பனரான இராசாசிக்குத் தமிழகத்தின் எல்லைகளை மீட்க வேண்டுமென்று இருந்த அக்கரை கூடத் திராவிட இயக்கத்தினருக்குதை இருந்ததில்லை. சென்னை மாநகரைத் தெலுங்கர்கள் பறித்துக்கொண்டு போகாமல் அரவமின்றி காத்த பெருமை எல்லாம் இராசகோபாச்சாரியாருக்கே போய்ச்சேரும்." "அத்துணைத்துரைகளுமே இன்று மார்வாடிகள், குசராத்திகள், பார்சிகள், சிந்திகள் போன்ற வடவரின் முற்றுடைமை ஆகிவிட்டன. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் முதலானோர். " பேதைத்தமிழனோ எல்லோரும் நம்மவரே எனப்பட்டாங்கு படிப்பவன். எல்லோருக்கும் நல்லவனாக இருந்து கெட்டவன். தெலுங்கன் தன்னுடைய மனக்கதவை அடைத்துக்கொண்ட பின்னர், கன்னடனும் அதேபோல் தன் உள்ளக்கதவை இழுத்து மூடிக்கொண்டபின்னர் தமிழன் மட்டுமே தன் திருவுளவாயை அகல விரியத்திறந்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பேதமை!!!!!!!!!!!!!!!!!!!!!!
  • Madhu
    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதே ஒரு தவறான பரப்புரை. இந்திய தேசியத்தால் பார்ப்பனியத்தால் விழுந்தோம் என்பதே சரியாக இருக்கும். பலமுறை விளக்கம் அளித்தாகிவிட்டது .. , திராவிடம் என்பது தமிழன் வாழ்ந்த இடத்தை குறித்தது, ஆரிய கலப்பு ஏற்பட்ட திராவிடர்கள் என்றோ கனடராகவும், தெளுங்கராகவும் , மலையாளிகளாகவும் மாறி விட்டனர். கர்நாடக ,ஆந்திர, கேரளா மக்கள் ஆரியத்திடம் சரண் அடைந்ததால் திராவிடன் என்பதே தமிழனை மட்டும்தான் குறிக்கும். நாம் தமிழர்கள் பலர் சாதியை பார்த்து தமிழரை அடையாளம் காண முற்படு கின்றனர். இது சரியா... ? இந்துத்துவ ஆதரவு நிலையில் நிற்கின்றனர். தமிழனை சாதி என்னும் குழியில் மேலும் தள்ள முற்படுவது தான் தமிழ் தேசதிர்க்கான பார்வையா.. தொலை நோக்கு பார்வை இல்லாமல் வெற்று உணர்ச்சியினால் ஒட்டு கட்சி அரசியல் நடத்தலாமே தவிர மக்களுக்கான அரசியலாக அது இருக்காது.
  • vetrichelvan/polur/TVM DT PH;
    pe.thi.ka koorum dhraavidam matrum thooya thamizh ina vaadham pesum naam thamizhar iyakkam 2 m mutrilum thavaraana kolgai 80 dhaan unmai. kaaranam 1) yegaadhibathyangal nam naattai adimaip paduththuvadhu kuriththu oru vaarththai kooda ivargal munu munuppadhillai. 2) indhiyaa 80 oru tharagu mudhalaliya koottathin appattamaana vettaikkaadu 80 yum ivargal kooruvadhillai. 3) paarppana yedhirppu yena ivargal koorinaalum paarppaniyam indhiyaa yenra dhesak kattumaanaththaip paadhukaaththuk kolla thamizh thesam utpada anaiththu dhesiya ina uzhaikkum makkalaiyum indhi / aangila aadhikkaththaal adimaippaduththuvadhaiyum ozhiththuk kattuvadhaiyum vasadhiyaaga maraikkinravargal . ..........................moththaththil thamizh thesaththin yedhirigalai dhisai thiruppum maaperum THAVATRAI SEIVADHODU YEDHIRIKKU MUZHUMAIYAAGA SEVAGAM SEIGINRAARGAL ! Ivvaaru adukkik konde pogalaam ! ippodhaikku idhai padhivu seiginren ! porumaiyaagap padiththa anaiththu THAMIZH NENJANGALUKKUM NANRI ! NANRI! UNGAL MELAANA BADHILAI AAVALUDAN YEDHIRP PAARPPEN !
  • Tamilan
    நண்பர் மது, ஈழத்தில் இன்றுவரை ஈழமக்கள் தங்களை ஈழத்தழிழர் என்றுதான் அழைக்கின்றனர் மாறாக ஈழதிராவிடர் என்று அழைப்பதில்லை இதிலிருந்து தெளிவாக தெரிகின்றது ஆதிகாலம் முதல் தமிழர்கள் ஒரு போதும் தங்களை திராவிடர் என்று அழைத்து இல்லை இனியும் அழைக்கபோவதும் இல்லை தயவுசெய்து எங்கள் மீது திராவிடத்தை தினிக்காதீர். நண்பரே திராவிடம் என்ற சொல் தமிழரையோ, தமிழர் வாழ்ந்த் இடத்தையோ குறிக்கும் சொல் அல்ல. திராவிடர் என்ற சொல் சங்ககாலம் தொடங்கி தமிழ் இலக்கியங்களில் எங்கும் தமிழரை குறிக்க தமிழ் புலவர்கள் பயன்படுத்தவில்லை. தமிழ் தெரியாத பிற மொழி மக்கள் (கன்னடர்,தெலுங்க்ர்,வடவர்கள்) தமிழ் மொழி பேசும் தமிழரை " திரமிளர்(தமிழர்)" என்று அழைத்தனர் இது பின் நாளில் திராவிடம் ஆகியது. பெரியார் முதலில் தன்னுடைய கட்சிக்கு தமிழர்கழகம் என்று பெயர் வைத்து பின் ஐந்து நிமிடத்தில் திராவிடர்கழகம் என்று பெயர் மாற்றினார் ஏனென்றால் முதலில் அவர் தமிழர் இல்லை.இங்குதான் சந்தேகம் நீங்கள் கூறுவதை போல மலையாளி, கன்னடர், தெலுங்கர் த்மிழறென்றால் தங்களுடய அமைப்புக்கு தமிழர்கழகம் என்று வைத்திருக்கலாமே மாறாக இல்லாத திராவிடர் என்ற புது பெயர் எதற்கு தெலுங்கர், கன்னடர் ,மலையாளி ஆகிய வேற்று இனத்தார் ஒரு போதும் தங்களை திராவிடர் என்று அழைக்கபோவது இல்லை ஏனென்றால் இல்லாத திராவிடரை அவர்கள் ஏற்றுகொள்வதில்லை அவர்களே தங்களை தங்களுடைய மொழி பெயரில் அழைக்கின்றனர் அதாவது கன்னட மொழி போசுகின்றவன் கன்னடர், மலையாள மொழி போசுகின்றவன் மலையாளி, தெலுங்கு மொழி போசுகின்றவன் தெலுங்கர் என்று அவர்கள் தங்கள் மொழியின் மூலமாக இனத்தை அடையாளம் காட்டுகின்றனர் ஆனால் பேதை தமிழன் தான் பேசுகின்ற தமிழ் மொழி அடையாளத்தை விட்டுவிட்டு திராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று திராவிடம் தினிக்கின்றது. உங்களுடைய திராவிட விளக்கத்தை வைத்து திராவிடராகிய மலையாளி, கன்னடர், தெலுங்கர் ஆகியேருக்கு எடுத்து கூறி அவர்களிடமிருந்து முல்லைபெரியார், காவேரி, கிரிஷ்ணா தண்ணிரை பெற்றுதரமுடியுமா? முடியாது பிறகு என்ன திராவிட்ம்????? எந்த காலகட்டத்திலும் ஆரியம் என்று சொல்லும் பார்ப்பன படையெடுப்பு தமிழ் மண்னை வென்றது கிடையாது மாறாக கன்னடர், தெலுங்கர், மராட்டியர், வடவர் முதலானவர் தமிழ் மண்னை சீரழித்தனர் இதற்கு ஏராளமான சாட்சி உண்டு (உதாரனமாக இன்று ஈழத்தில் எப்படி சிங்களவன் தமிழ்ர்களை ஏமாற்றி வெற்றி கொண்டு தமிழர் நிலத்தில் ஆட்சி செய்கின்றானோ அது போல தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி இன்று மாற்றான் கையில்).ஆனால் இந்த உண்மையை திராவிடம் (கன்னடர்,தெலுங்கர்) மறைத்து ஆரியத்தின் மீது முழு பழியை சுமத்துகிறது. பெரியார் எப்படி எந்த சாதியின் மூலமாக இவன் ஆரியன்! இவன் திராவிடன்! என்று பிரித்தாரோ அதே சாதியின் அடிப்படையில் நாம் தமிழர் இயக்கம் இவன் தமிழன்! இவன் திராவிடன்! என்று பிரிக்கும் ஏனென்றால் தன் இனத்தை எப்படி மாற்றானிடம் இருந்து காப்பது என்று பெரியாரிடமிருந்து கற்றது. சாதி ஒழிப்பை பற்றி பேசும் எவரும் இன்று வரை அதற்கான செயல் திட்டத்தை கூறவில்லை சாதி இல்லாத சமத்துவத்தை உருவாக்குவதை விட்டு விட்டு சாதியை வைத்து பிரிவினைவாதம் பேசினார்கள் பார்ப்பான், மேல் சாதி, தாழ்த்தபட்டவன் என்று. ஒருவனை பார்ப்பன் என்று அழைத்துகொண்டு அவன் சாதியை ஒழிக்க போகின்றனறாம். எப்படி முடியும்? சாதியை ஒழிக்க இந்தியாவில் எத்தனை விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றால் தெரியாது ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும்........ என்ன ஒரு சிந்தனை திராவிடர் கழகங்கள் தோன்றி 60 ஆண்டுகள் ஆகி 40 ஆண்டுகள் ஆட்சி செய்கின்றனர் இன்னமும் சாதியை ஒழிக்கின்றனர் இவர்களால் ஒரு சாதியை ஒழிக்க முடிந்ததா???????? முடியாது - சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மிகப் பெரிய மோசடிகாரர்கள்
  • DR.vetrichelvan/POLUR/TVM Dt.
    iniya nenjangalukku vanakkam. dhraavidam oru mozhik kudumbaththai adaiyaalap paduththum sol ! aanaal thamizh 80 oru inaththai adaiyaalap paduththum sol ! thamizh dhesiayam pesuvadhu iyalbaanadhu ! aanaal thooya thamizh dhesiyam pesuvadhu aabaththaanadhu ! paal thaakkare pesuvadhu thooya marattiya dhesiyam ! avaradhu ina vaadham thamizharai+pira inaththavarai adiththu virattuginradhu ! seemaanin ina vaadham ini ingum pira ina uzhaikkum makkalukku yedhiraaga thiruppap padum ! unmaiyil thamizh makkalin yedhiri 1. pannaattu yegaadhibathyangal KURIPPAAGA AMERIKKAA ! 2. INDHIYAA MUZHUDUM KOLLAI ADIKKUM THARAGHU MUDHALAALIGAL 3. INDHIYAA MUZHUDHUM + THAMIZH NAATTILUM UZHAIKKUM MAKKALAI IZHI SAADHI YENA ODUKKI THAM SAADHI MELAANMAI I NILAI NAATTI OTTUNNI VAAZHVU VAAZHNDHU VARUM PAARPPANIYAM (4). 60% THAAZHTHTHAPPATTA PIRPPATTA MAKKALIDAM KAANI NILAM KOODA ILLAADHA NILAIYIL KANJIKKU EERODE/THIRUPPOOR/CHENNAI/BENGALORE/KERALAA YENA ODI ODI PIZHAIKKUM KODUMAIYAANA SOOZH NILAIYIL 2000 YEKKAR MUDHAL 10000 YEKKAR VARAI KUVITHTHU VAITHTHU INDHIYA/THAMIZHAGA ARASIYALILUM KOTTAMADIKKUM VAANDAIYAAR/MOOPPANAAR PONRA YENNATRA NILAP PIRABHUKKAL INDHA 4 YEDHIRIGALODU THAMIZH NAATTIL NILAVUM ULAGA SANDHAIKKAAGA NADAKKUM " THARAGHU PORULAADHAARA URPPATHTHIMURAI " dhaan thmizhaga makkalin anaiththu thunba thuyarangalukkum kaaranam ! indha 4 yedhirigalaiyum veezhththa vendum ! thamizh naattil namadhu velaanmai/ thozhil thurai / kadal valam/iyarkkai valam/kaadu kani valam / paasana muraigal / thamizh maruththuvam/ aagiya anaiththum meetkappada vendum ! adharkku thamizh naattin arivuththuraiyinar / maanavar / thozhilaalar/ uzhavar/ magalir/ thaazhththap patta pirppatta kooli yezhai makkal anaivarum thamizh dhesiya thittaththin adippadaiyil THIRATTAP PADA VENDUM ! ORU THAMIZH DHESIA VIDUDHALAI MUNNANI KATTI THAMIZH DHESAM INDHIYACH CHIRAIYIL IRUNDHU MEETKAPPATTU SUDHANDHIRAMAANA THARCHAARBAANA THAMIZH DHESIA URPPATHTHI MURAI KONDA" PURATCHIGARA THAMIZH DHESA MAKKAL JANANAAYAGA KUDIYARASU " PADAIKKAP PADA VENDUM ! IVVAARU THELIVAANA MAATRUTH THITTAM INRI VERUM AANDA THAMIZH INAM AALA NINAITHTHAAL ? YENNA AAGUM ? MAKKAL KAIYIL YEVVIDHA ADHIGAARAMUM ILLAADHA INRU NILAVUM POLI JANANAAYAGA AATCHI AMAIPPILEYE THAMIZHAN MELUM ADIMAIYAAGA NEEDIPPAAN ! Udhaaranam & ungal kurippirkkaaga : karnaadagaththaiyum/aandhraaviyum andha andha dhesiya inaththaich cherndhavargal dhaan aaluginranar ! andha makkal nimmadhiyaaga VAAZHGINRAARGALAA ? ANGU PORULAADHAARA ODUKKUMURAI ILLAIYAA YENA YOSIYUNGAL ! DHAYAVU SEIDHU ! NANRI ! INIYA NENJANGALE ! THODARATTUM NAM VIVAADHAM ! - VETRICHELVAN
  • Madhu
    வணக்கம் தமிழன் அவர்களே, //ஆரிய கலப்பு ஏற்பட்ட திராவிடர்கள் என்றோ கனடராகவும், தெளுங்கராகவும் , மலையாளிகளாகவும் மாறி விட்டனர். கர்நாடக ,ஆந்திர, கேரளா மக்கள் ஆரியத்திடம் சரண் அடைந்ததால் திராவிடன் என்பதே தமிழனை மட்டும்தான் குறிக்கும்.// ஆதலால் திராவிடன் என்றாலும் தமிழன் என்றாலும் நாம் தான். ஈழ தமிழர்கள் என்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் தான் சொல்ல ஆரம்பித்தனர். //பெரியார் முதலில் தன்னுடைய கட்சிக்கு தமிழர்கழகம் என்று பெயர் வைத்து பின் ஐந்து நிமிடத்தில் திராவிடர்கழகம் என்று பெயர் மாற்றினார் ஏனென்றால் முதலில் அவர் தமிழர் இல்லை.// புல்லரிகிறது உங்கள் விளக்கம். சரி யாரெல்லாம் தமிழர்..? ப. சிதம்பரம்,தங்கபாலு, சோ .ராமசாமி ....இவர்களா..??? தமிழன் தமிழ் மொழி அடையாளத்தை இழந்ததற்கு காரணம் பார்பனர்களே , அவர்களின் பார்பனிய இந்து மதமே, அவர்களின் வசதிக்காக உருவாக்க பட்ட இந்திய தேசியமே, இந்திய தேசிய சிந்தனையே. //.....முல்லைபெரியார், காவேரி, கிரிஷ்ணா தண்ணிரை பெற்றுதரமுடியுமா? முடியாது பிறகு என்ன திராவிட்ம்?????...// அரைகுறையாக பெரியாரையும், திராவிடத்தையும் புரிந்து கொண்டதால் வந்த கேள்வி இது. //ந்த காலகட்டத்திலும் ஆரியம் என்று சொல்லும் பார்ப்பன படையெடுப்பு தமிழ் மண்னை வென்றது கிடையாது// படையெடுப்பு என்றால் ராணுவம்தானோ உங்கள் மொழியில். கலாசார படையெடுப்பு நடத்தி இன்று தமிழன் தை பூசதையும், பொங்கல் திருநாளையும் விட தீபாவளி கொண்டாட வைத்து நம்மை இழி நிலைக்கு தள்ளி உள்ளானே அது என்னவாம். //ஆனால் இந்த உண்மையை திராவிடம் (கன்னடர்,தெலுங்கர்) மறைத்து ஆரியத்தின் மீது முழு பழியை சுமத்துகிறது.// பார்பன விசுவாசம் தான் தெரிகிறது ... பெரியார் சாதியை சொல்லி தமிழனை காக்கவில்லை. பார்பானையும் , பார்ப்பனியத்தையும் தனிமை படுத்தினார் தமிழனின் இழிவு நீங்குவதற்காக. சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற சிந்தனையே தவறு என்பீர்களா. சரிதான் . பார்பனியதிடம் சரண் அடைந்தால் இப்படிதான். பாப்பான் சாதியை விட முடியாதவன், சாதியை விட்டால் அவன் மேலாண்மை போய்விடும். இந்து மதமே நொறுங்கி விடும்.அதனால் அவன் சாதியை விடமாட்டான். அதனால் அவனை தனிமை படுத்தி நம் இனத்தை காக்க அவனது அடையாளத்தை சொல்லியே தீர வேண்டும். ஆனால் நம் தமிழர்களுக்கு உள்ளேயே சாதி வேறுபாட்டை வளர்த்தல் அது தமிழ் தேசியத்தில் போய் முடியாது, தீண்டாமையில் தான் பொய் முடியும். //திராவிடர் கழகங்கள் தோன்றி 60 ஆண்டுகள்...........// பார்பனிய பேச்சு இது. பெரியாரின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தியவர்கள் திராவிட கட்சி நடத்தியவர்கள். அது சரி இந்திய தேசியத்தை எதிர்க்கும் "நாம் தமிழர்கள்" எப்படி தமிழ் தேசியம் அமைப்பீர்கள் இந்திய தேர்தலில் பங்கேற்றா?? முரண்பாடாக தெரியவில்லையா ??
  • Ravi
    yar yenna sonnalum PERIYAR DK vai patry pesa yarukkum thakuthi kidayadu namakul sandai varakudathu yendru virumpum pala thamilaril nanum oruvan .
  • k.van
    aathil thamil moli pesiya manithanidam saathi illai,saathi pira moli pesupavarkalidam irunthu vanthathu,thamilanaiyum thamilaiyum eppadi indiam akiramiththatho athai pola thamilanaiyum saathi aakiramiththadhu,thamilil saathi illai,naam thamilar

No comments:

Post a Comment