Tuesday, November 30, 2010

வன்னி எலி


ர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.
வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:
சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நோர்வே 2010)
சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)
சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியவை:
விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010)
ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010)
சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010)
14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010)


ணர்ச்சிவசப்பட்ட பாலுமகேந்திரா :


Friday, November 26, 2010

மகிந்தவுக்கு அமெரிக்காவில் ஆப்படித்த - தமிழர்

22 - 10 -2010 ஜோர்ஜ் வில்லி வழக்கறிஞரை வணங்குகிறோம் 

              சமீபத்தில் ஐ.நா.வின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற மகிந்த அமெரிக்கா சென்றிருந்தார். ஐ.நா.மன்றில் அவர் உரையாற்ற எழுந்து வரும் பொழுது சுமார் 23 நாடுகளின் தலைவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டனர். இதனையடுத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் மகிந்த உரையாற்ற வேண்டிய கட்டாயம் தோன்றியதோடு முகத்தில் கரியும் பூசப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அதனை ஈடுசெய்ய அவருக்கு அமெரிக்காவின் ஃகூஸ்டன் மாநிலத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஒன்றைக் கொடுக்க அமெரிக்க செனட்டர் ஒருவர் முயல, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இது முடிந்துள்ளது. 

         மங்களகரமாகத் தொடங்கப்பட்ட இவ்விழாவில் தொடக்க உரை நிகழ்த்த அமெரிக்காவில் உள்ள பிரபல தமிழ் வழக்கறிஞர் ஜோர்ஜ் வில்லி அழைக்கப்பட்டிருந்தார். அவரும் மகிந்தாவும் ஒன்றாக சட்டக் கல்லூரியில் பயின்றதாகக் கூறப்படுகிறது. ஜோர்ஜ் வில்லி தனது வரவேற்பு உரையில் ஐனாதிபதியை மிகவும் புகழ்ந்து, பின்னர் சிறிது சிறிதாகக் காலை வாரினார். ஒருவகையான வஞ்சப்புகழ்ச்சி மற்றும் நக்கல் கதையால் ஒரு சமயத்தில் மகிந்தாவே தனது தலையில் கைவைத்து நெற்றியை சாய்க்கும் அளவிற்கு அவர் உரை அமைந்திருந்தது என்றால் பாருங்களேன். 

                  நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார். 
               ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது. 
                      மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை. விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை ! 
அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. (நன்றி - அதிர்வு.காம்) 



காணொளி இணைப்பு