Monday, September 20, 2010

டில்லியில் கேரள மண்ணின் மைந்தர்கள் ஆதிக்கம்

நன்றி:-பகலவன் இணையதளம்
மற்ற தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளா மிகச் சிறிய மாநிலம். மக்கள் தொகையும் குறைவு தான். ஆனால், இந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் தான், மத்திய அரசின் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.
ஒவ்வொரு துறையின் தலைமைப் பதவியையும் மலையாளிகள் தான் அலங்கரித்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் இந்த பட்டியலில் மேலும் ஒரு மலையாள மண்ணின் மைந்தர் இடம் பிடித்துள்ளார். அவர் பெயர் பி.ஜே.தாமஸ். மத்திய கண்காணிப்பு துறை ஆணையராக இவர் கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், இவரை கண்காணிப்பு துறை ஆணையர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது மத்திய அரசு. இப்போதெல்லாம், டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மலையாள மணம் கம, கமக்கிறது. கடவுளின் சொந்த நாடு என கூறப்படும் கேரளாவில் இருந்து, கூட்டம், கூட்டமாக டில்லியை நோக்கி அதிகாரிகள் கூட்டம் படையெடுத்த வண்ணம் இருக்கிறது. உதாரணத்துக்கு, மத்திய அரசின் மிகப் பெரிய பொறுப்புகளை தங்கள் கைக்குள் வைத்துள்ள மலையாள மண்ணின் மைந்தர்கள் சிலரின் பெயர்கள்:
கே.எம். சந்திரசேகர் – மத்திய அமைச்சரவை செயலர்
சிவ்சங்கர் மேனன் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
நிருபமா ராவ் – வெளியுறவுச் செயலர்
பி.ஜே.தாமஸ் – மத்திய கண்காணிப்பு துறை ஆணையர்
டி.கே.ஏ.நாயர் – பிரதமரின் முதன்மை செயலர்
மாதவன் நம்பியார் – விமான போக்குவரத்து செயலர்
ஜி.கே.பிள்ளை – உள்துறை செயலர்
இவர்களைத் தவிர, கேரளாவில் பிறக்காவிட்டாலும், இந்தியன் சிவில் சர்வீஸ் பணிகளில் இடம் பிடித்துள்ள கேரளா பேட்ஜ் அதிகாரிகள் ஏராளமானோர் மத்திய அரசு பணிகளிலும் கொடி கட்டிப் பறக்கின்றனர். இந்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரல் வினோத் ராய், மத்திய திட்ட கமிஷன் செயலர் சுதா பிள்ளை ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவின் தனி பாதுகாப்பு செயலர் பி.பி.மாதவன் நம்பூதிரியும் கேரளா தான். இவரது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக தான், காங்., பொதுச் செயலர் ராகுல் சமீபத்தில் திருச்சூர் சென்றார். மத்திய அரசுப் பதவிகளில் கேரள மாநிலத்தவர் ஆதிக்கம் செலுத்துவது என்பது, நீண்ட காலமாகவே உள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன்பே, இந்த நடைமுறை உண்டு. வைசிராய் மவுண்ட்பேட்டன் காலத்தில், அவரது நம்பிக்கையை பெற்ற ஊழியராக இருந்தவர் வி.பி. மேனன், கேரளாவைச் சேர்ந்தவர் தான். ஒரே விரலில், மிக வேகமாக டைப் செய்யும் திறமை பெற்றவர்.
தற்போதைய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கரின் மேனனின் குடும்பத்தின் பெரும்பாலானோர், மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிவர்கள் தான். இவரது தந்தை, பி.என். மேனன் யுகோஸ்லோவியாவில் இந்திய தூதராக பணியாற்றியவர். இவரது தாத்தா கே.பி.எஸ்.மேனன், இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர். இவரது உறவினர் கே.பி.எஸ்.மேனன் (ஜூனியர்) சீனாவுக்கான இந்திய தூதரக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதுதவிர, கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், டில்லியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். கல்வி அறிவும், ஏற்றுக் கொண்ட பணியை திறம்படச் செய்து முடிக்கும் மனப்பான்மையும் தான், சேட்டன்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
நன்றி: தினமலர்

Sunday, September 19, 2010

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான் !

இது தமிழன்பனின் பதிவு

அன்புள்ள த!

வணக்கம் தமிழன்பன். நீங்கள் முன்னர் வினவு குறித்த கட்டுரையில் மலையாளிகளை சேட்டன்கள் சேச்சிகள் என்று விளித்து எழுதி இருந்தீர்கள் அது என் மனதை காயப்படுத்திவிட்டது. நாட்கள் பலவாகியும் நீங்கள் அதனை இன்னும் உங்கள் தளத்திலேயே வைத்து இருக்கிறீர்கள் அதனால் மனது பொறுக்காமல் இதனை எழுதுகிறேன்.தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி என் பெயரை பெயரை வெளியிடவேண்டாம் (தனக்குத்தானே கடிதம் எழுதும் பொழுது பின்நவீனத்துவ ‘லூசு’  செய்வது போலே இப்படி ஒரு வரி இருக்க வேண்டும் அல்லவா?)
மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் என்று வினவு எழுதியதை படித்த பின்நவினத்துவ பெருமாள்கள் அதே தோசையை திருப்பிபோட்டு தமிழர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று எழுத்துலக கோமாளிக்கு கடிதாசி போட்டு இருக்காங்க . வினவு தளத்துள சங்கரன் வந்து வாழ்த்திய பொழுதே எதையோ ‘நோட்’ பண்ணுறாய்ங்கண்ணு சிறிது சந்தேகம் வந்துச்சு அதை இந்த கடுதாசி தீர்த்து வைச்சிருச்சு.
மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபிறகு கருணாநிதி முதல்வராக வந்தபொழுது மலையாளிகள் தமிழகத்தில் டீக்கடை நடத்த முடியாத சூழல் உருவாகிப்போனதாக இவனுக கதைவிடுரானுங்க. ஆனா மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்கு பின்னர் முல்லை பெரியாரில் தமிழனுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு தண்ணீரும் மறுக்கப்பட்டு ராமநாதபுரத்தமிழன் விவசாயத்திற்கு மாத்திரமல்ல குடிக்ககூட தண்ணியில்லாம அல்லாடுகிறான் இதுல இவனுக தமிழ்நாட்டில் தேநீர்கடை நடத்தமுடியவில்லையாம் என்ன கொடுமை சார் இது.
எப்பவுமே கேரளத்தானுங்க எங்க பூமி செங்கொடி பறக்கும் பூமி என்று ஓவரா பில்டப் கொடுப்பார்கள். உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று ‘பெர்பாமன்ஸ்’ கொடுப்பார்கள் ஆனால் பக்கத்து மாநிலத்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டர்கள்.  ‘பென்னிகுக்’ என்ற புண்ணியவான் கட்டிக்கொடுத்த முல்லைப்பெறியாரை தகர்ப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று அச்சுதானந்தம் என்னும் செங்கொடி தோழர் இன்னும் கேரளமண்ணில் வாழ்ந்து வருகிறார்.  முல்லைபெரியார் அணையில் குமுளி சாக்கடை நீரை தாரளமாக கலந்து விடுவது கூட தோழர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளின் தொடர்ச்சிதான்.
எனது கல்லூரி காலங்களில் எனது நண்பன் வீட்டு திருமணத்திற்கு மதுரைக்கு போயிருந்தோம் வாகனம் ஓட்டிவந்தவர் மலையாளி.  நண்பனின் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவருபவர். எங்களோடு பயணம் நெடுக எதுவுமே பேசவில்லை. தாகம் என்ற பொழுது நாங்கள் கொடுத்த நீரை குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.  எனக்கு ‘கோக்’ வேணும் என்றான் நாங்களும் வாங்கி கொடுத்தோம் திருமணவிருந்தில் சாப்பிடும்பொழுதும் ‘கோக்’தான் வேண்டும் என்றான்.  ‘கோக்’ இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என்றான் ஏன் அப்படி என்று கேட்டால் தமிழ்நாட்டில் ‘இவர்கள்’ ‘கழித்துவிட்ட கழிவுகள் கலந்த நீரை குடிக்கிறோமாம் அதனால் அவரு தமிழ்நாட்டில் தண்ணீர் குடிக்க மாட்டாராம். “அட லூசுப்பயலே தமிழ்நாட்டில் இருந்து தண்ணி எடுத்த்துத்தான் ‘கோக்’ செய்யுராண்டா அப்புறம் எதுக்குடா அதை குடிக்கிற?” என்று கேட்டால் ” அது வேற ரிவராக்கும்னு” நமக்கே பாடம் எடுக்குறான் மக்களே இவய்ங்கள நாம புண்படுத்துறோமாம் “என்ட அம்மே!”
மேலும் தமிழர்களுக்காக தம்வாழ்நாளை அர்பணித்த கம்யுனிஸ்டு தலைவர்களை மலையாளத்தான் என்ற காரணத்தால் நாம் மதிப்பதில்லையாம். தமிழர்கள் தம் வரலாற்றில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுத்தார்கள் என்றால் அது மருத்தூர்கோபாலராமச்சந்திரமேனன் (எம்ஜிஆர்)  தவிர வேறு யாரு?   மூன்றுமுறை தொடர்ச்சியாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் உட்கார்த்தி அழகு பார்த்தவர்கள் தமிழர்கள் எம்ஜிஆரை மலையாளி என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டு தமிழன் மாத்திரமல்ல ஈழத்தமிழனும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவனாக பார்த்தார்கள். ஆனால் ஒரு மலையாள பப்ளிசிட்டி பைத்தியம் தனது வலைப்பூவில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது ‘உங்களுக்கு படிப்பு இருக்கிறது பண்பு இல்லை!” என்பதற்கு பதிலாக “உங்களிடம் பைப்பு இருக்கிறது பம்பு இல்லை”  என்றார் என்று கீழ்த்தரமாக விமர்சித்தது சோடாவிற்காக மைக் பிடிக்கும் உருப்படாத உடன்பிறப்புகளை மிஞ்சும் விதத்தில் மக்கள் திலகத்தை அவதூறு செய்தது அனைவருக்கும் நினைவு இருக்கும் இப்பொழுது மலையாளப்பெருமாலு அந்த பப்ளிசிட்டி பைத்தியத்திற்க்கே கடிதம் எழுதுகிறது தமிழர்களுக்காக உழைத்த மலையாளிகளை தமிழர்கள் மலையாளிகள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒதுக்கி வைத்தார்கள் என்று. இதை எங்கே போய் சொல்லி அழுவது தமிழன்பா!

தமிழனின் தொப்புள்கொடி உறவுகளை கூட்டு சேர்ந்து கொன்று அழித்த மலையாளிகள் சிவச்சங்கரமேனங்களும் நாராயணன்களும் நம்பியார்களையும்விட தமிழன் ரெம்ப மோசமானவன் என்று எதோ ஒரு பைத்தியம் தனக்கு தானே கடிதம் எழுதி கொள்ளுமாம் பின்னால பின்னூட்ட பெருமாளு ஆமாப்பா தமிழன் ரெம்ப மோசம்னு எழுதுவாராம். இதுல இவனுக வீட்டுல தனியா உக்காந்து அழுதானுங்கலாம் ஏன் தமிழன் இம்புட்டு மோசமா இருக்காய்ங்கன்னு.
இப்படித்தான் வினவுல ஒருத்தரு எழுதுறாப்ல கேராளாவுல கம்யுனிசம் வளந்திடுச்சு தமிழ்நாட்டு சரியா வளரலன்னு அட போங்கடா இவனுகளா அண்டை மாநிலத்திற்கு தண்ணி விடாதே! உலகத்தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் தமிழகத்தொழிலாளிகளே நாசமாப்போங்கள் என்பதுதான் கேரளா காம்ரேட்டுகளின் புதுவகையான கண்டுபிடிப்பு போலும். மலையாளத்தான் கொடுத்த தேநீருக்கு நன்றி சொல் என்று புத்திமதி வேறு கூறுகிறார்கள். ஏதோ தமிழ்நாட்டுல எவனுக்குமே தேநீர் போடவே தெரியாத மாதிரி.

கடிதம் எழுதும் போது ரெம்ப தெளிவா இருக்காய்ங்கப்பா அதாவது மொழிவாரி மாநிலத்திற்கு பிறகு தமிழர்கள் மலையாளிகளை விரட்டி அடிச்சது மாதிரியும் தமிழர்கள் கேரளாவிற்குள் காலடி வைத்ததே தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபிறகுதான் என்பது போலவும் நல்லாவே கதை காட்டுரீங்கப்பா. தமிழக முதல்வராகவே ஒரு மலையாளி வரமுடிகிறது கேரளாவுல அது முடியுமா?. ஆனால் இவனுக தமிழர்களுக்கு கேரளா ரேசன்காடு எல்லாம் கொடுத்து இருக்கு தெரியுமான்னு நமக்கே காது குத்துரானுங்க. மலையாளிகள் மிகுதியான நாகர்கோயில் தமிழ்நாட்டோடு இணைந்தது போல தமிழர்கள் நிறைந்த கோட்டயம் கேரளாவோடு இணைந்தது வரலாறு. இதுல எர்ணாகுளத்துப்பக்கம் தமிழர்கள் பல பஞ்சாயத்துப்பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்திருக்கிறார்கள்.
இன்னைக்கு இருக்குற முதல்வரு ஓனம் வந்தா உடனே வாழ்த்து சொல்லுறாரு. அதுமாத்திரமில்லாம அரசு விடுமுறைவேறு அறிவித்து இருக்கிறாரு. பொங்கலுக்கு அச்சுக்குட்டி வாழ்த்து சொன்னதுண்டா? தமிழ்நாட்டு திரைத்துறையில் ராதமேனன் கவுதம்மேனன்னு எத்தனை எத்தனையோ மேனன்கள் வந்து கல்லா கட்டுறானுங்க. மலையாளியை ‘தல’ என்று கொண்டாடுறான் தமிழ்நாட்டு சினிமா ரசிகன். அந்த தறுதலையும் தமிழ்நாட்டு பிரச்சனை நாங்க ஏன் போராடணும்னு பேசிக்கிட்டு திரியுது. ஜோய் ஆலுக்காஸ் முதல் மலபார் கோல்டு வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு.  இன்னும் இவர்களுக்கு என்னதான் வேணும்? ஒருவேளை தமிழ்நாட்டை காலிபண்ணிகொடுத்தாத்தான் தமிழனை நல்லவன்னு சொல்லுவானுங்க போல.
அய்யா தமிழன்பரே இப்படியே வரலாற்று உறவு அவர்கள் நமது சேட்டன்கள் சேச்சிகள் என்று கூறி அவர்கள் எவ்வளவு எச்சி துப்பினாலும் நாம சகிச்சுக்கனும்னு சுண்ணாம்பு தடவிப்புடாதீங்கய்யா. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிப்புட்டேன். தமிழகத்தில் மும்தாஜை கேரளப்பெண்ணாக காட்டி சேச்சிகளை அவமானப்படுத்தி புட்டானுங்கலாம் இதை கண்டுபிடித்த அறிவாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் சொல்லுற அந்தத்திரைப்படத்துல கொழுப்பெடுத்து பேசிய விவேக்கின் நாக்கில் மும்தாஜு சேச்சி வல்லிய சூடு வைக்காம்போலே சீனு உண்டு பச்சே நிங்கலண்ட படத்தில தமிழனை  பாண்டின்னு சம்சாரிக்கும் பட்டிக்கு எங்கணும் சூடுவைக்கும்?”
இப்படிக்கு….
(பறையாம்பாடில்லே!)

Wednesday, September 8, 2010

“குடி அரசு” – கொளத்தூர் மணி உரை

நன்றி;-மீனகம் இணையதளம்
kolathurmani_speechதிருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் “குடி அரசு” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் த.செ.மணி “சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு”. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை மறைத்துவைத்தது போல் “குடி அரசு” நூலையும் மறைத்துவைக்கும் நிலை கி.வீரமணி தொடுத்த வழக்கால் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்

Sunday, September 5, 2010

“பூவுக்குள்” குறும்படம்

பிரித்தானியாவில் உண்ணாநிலைப்போராட்டம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. “பூவுக்குள்” குறும்படம்.

Saturday, September 4, 2010

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல, இயற்பியலே!


இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.

Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.

இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே.

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.
அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.

தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.

2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.
இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை.


தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.
தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.