Wednesday, June 8, 2011

அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியல்!!!


                      தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்.
முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்!

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!

மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்

  1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29. சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30. நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31. பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32. ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33. ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34. ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35. கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36. சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37. விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.


‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.


அவர்கள்:
  • ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  • வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  • விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  • உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  • ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.


இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

Thursday, February 10, 2011

தமிழ் திங்கள்களை பின்பற்றும் மலையாளிகளும்; சமஸ்கிருத திங்களை பின்பற்றும் தமிழர்களும்


நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.
`நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.
காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் தருகிறது.
தொடர் ஆண்டு
தலைநகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு, அரசர்கள் முடிசூட்டிக் கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைபிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட் டயங்கள் மூலம் தெரிகின்றன.
நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது.
தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துக் கூறியதாகவும் தெரியவில்லை.
60 ஆண்டு வந்த வழி
இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக்கிடந்த கடவுள், மதம், சாதி, மூட நம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள
நெருக்கத்தையும் பயன்படுத்திப்
`பிரபவ’ முதல் `அட்சய’ வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.
அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்குமேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.
அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக்கதை வருமாறு:
‘ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைளுடன் கூடி இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன் `நான் இல்லாப்பெண்ணை வரிக்க’ என்றான்.
இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார். எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காணமுடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன், நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமா பதம் பெற்றனர்.
இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவான்கள் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. 70 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் மிகக் குறுகியதினாலும் சரித்திர நூற்குப் பயன்படாது.
ருத்ரோத்காரி என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியப்படாமையால் இந்த அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை.
மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, சரித்திர நூலுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறியமுடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குமாரர்கள்தாம் 60 தமிழ் வருடங்கள் என்பது கதை. எல்லாரும் குமரர்கள்; குமரியே இல்லை. ஆண்டுக்கதையிலும் ஆண் ஆதிக்கமே! ஆணும் ஆணும் கலவி செய்தால் பிள்ளை பிறக்குமா? `எய்ட்சு’ நோய் பிறக்குமா?
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது; ஆபாசமானது; அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது; கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது’ மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எந்தச் சொல்லும் தமிழ் இல்லை; தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல; அனைத்துச் சொற்களும் வடமொழி வடிவங்களே. தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறானவையே.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிடு வதற்கு முடியவில்லை.
 இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டு மிராண்டி மொழி; தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் தாம் அறிவு ஆசான் தந்தைபெரியாரும் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவும் தமிழ் அறிவு மொழி என்றும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் விளங்கச் செய்வதற்குத் தங்கள் இறுதி மூச்சுவரை எழுத்து, பேச்சு, பரப்புரை (பிரச்சாரம்) போராட்டம் முதலியவை மூலம் பாடுபட்டார்கள்.
திருவள்ளுவர் ஆண்டு
இந்த ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள்.
திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம சுந்தர பாரதியார், முந்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவார்கள்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை: இறுதி மாதம் மார்கழி; புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு.31 எனவே, ஆங்கில ஆண்டன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2011+31=2042.
தமிழ் நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.
தமிழ் திங்கள் (மாதம்)
“““““““““““““““`
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.
அவை:–
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)
இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.
1. மே”ம் 2. ரி”பம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்.
என்னும் பன்னிரண்டு ராசி(ஓரை)களில் கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,மீனம்
ஆகிய ஐந்தும் தமிழ்ப் பெயர்களே.
மே”ம், ரி” பம், மிதுனம், சிம்ம, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய
ஏழு பெயர்களும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.
அவை முறையே மேழம், விடை, ஆடவை, மடங்கல், நளி, சிலை, சுறவம்
என்று தமிழில் பாவாணர் அவர்களால் மீட்கப்பட்டது
MalayalamMalayalamGregorian Calendarsamskrit calendarSaka eraSign of Zodiac
Chingamചിങ്ങംAugust- SeptemberAavaniSravan- Bhadrapada(Leo)
Kanniകന്നിSeptember–OctoberPurattasiBhadrapada – Asvina(Virgo)
ThulamതുലാംOctober–NovemberAippasiAsvina – Kartika(Libra)
Vrishchikamവൃശ്ചികംNovember–DecemberKarthigaiKartika – Agrahayana(Scorpio)
DhanuധനുDecember–JanuaryMargazhiAgrahayana – Pausa(Sagittarius)
MakaramമകരംJanuary–FebruaryThaiPausa – Magha(Capricon)
KumbhamകുംഭംFebruary–MarchMaasiMagha – Phalguna(Aquarius)
MeenamമീനംMarch–AprilPanguniPhalguna – Chaitra(Pisces)
MedamമേടംApril–MayChithiraiChaitra – Vaisakha(Aries)
EdavamഇടവംMay–JuneVaikasiVaisakha – Jyaistha(Taurus)
MidtunamമിഥുനംJune–JulyAaniJyaistha – Asada(Gemini)
Karkadakamകര്‍ക്കടകംJuly–AugustAadiAsada – Sravana(Cancer)

Monday, January 10, 2011

சீமான் - காணொளிகள்

    நன்றி:Tamilan Pradeep Kumar Mani நாம் தமிழர் கூகில் குழுமம்
    Seeman - 2011 Videos 
    Seeman - 2010 Videos 
     Seeman - 2009 Videos 
     Seeman - 2008 Videos 
     Seeman - 2007 Videos 
    Seeman - 2006 Videos