Tuesday, July 27, 2010

ஏஞ்சலினா சோலி, செனிபர் லோபசின் நீதிக்கானக் குரலும், அசின், சரத்குமாரின் போலி மனிதநேயமும்!


நன்றி: மீனகம் இணையதளம் நடிகர் சரத்குமார் அவர்கள் IIFA விழாவிற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, புறக்கணிப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் பேசத்தொடங்கினார். Headlines Today செய்தி நிறுவனத்தின் IIFA தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போது, சரத்குமார் பேசியதைக் காணும் யாவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.

இவர் ஏன் இப்படி பேசுகிறார் எனத்தெரியாது குழம்பிய பலருள் நானும் ஒருவன். அதற்கான விடையை, பின்னணியைப் பின்பு அறிய நேர்ந்தது. அதைப் பற்றி பேசுவதற்கு முன் சிங்கள அரசை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை தூங்குவது போல் நடிக்கும் இவர்களுக்கு விளக்கிவிடுவோம்.
உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் இசை கலைஞரான செனிஃபர் லோபசின் பிறந்தநாள் இம்மாதம் 24 ஆம் நாள். இதை முன்னிட்டு ஒரு கலைநிகழ்ச்சி நடத்துமாறு, அவர் வட சைப்ரசுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் முதலில் அழைப்பை ஏற்றார். இதற்காக அவர் பெற இருந்த தொகை மூன்று மில்லியன் டாலர்கள். அதாவது ரூபாயில் மதிப்பு  13 கோடியே 80 லட்சம். “வட சைப்பரஸ் துருக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண். அங்கு ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன” என்று கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.  இதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தார் தெரியுமா? “நான் அறிந்தே மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு அரசையோ, நிறுவனத்தையோ, நாட்டையோ ஆதரிக்க மாட்டேன் என்றும் அப்பகுதியில் உள்ள அரசியல் நிதர்சனங்கள் குறித்து எங்களுக்கு உள்ள புரிதலிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு இது” என்றும் அறிவித்துவிட்டு அங்கு போக மறுத்தார். இதைத் தான் நாம் இங்குள்ள நடிகர், நடிகைகளிடம் எதிர்பார்க்கின்றோம்.
புறக்கணிப்பின் அவசியத்தை விளக்குவதற்காக மட்டுமே சரத்குமார் அவர்கள் நடித்த திரைப்படத்திலிருந்தே ஒரு உதாரணம் இதோ,
நியாயமாக வழங்கிய தீர்ப்பு தனக்கு எதிராக இருப்பதால்  நாட்டாமையைக் கொன்றதற்கும், ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதற்கும் வில்லனாக நடித்த பொன்னம்பலம் குடும்பத்தை 18 ஆண்டுகள் ஊரை விட்டே தள்ளி வைப்பார் நாட்டாமை. அப்பொழுது நாட்டாமை தனது மகனுக்கு  சொல்லும் முக்கிய அறிவுரை,  “தீர்ப்பு வழங்கும் போது சொந்தம் பந்தம் எதையும் பார்க்க கூடாது. நியாயப்படி செயல்பட வேண்டும்” என்பது. பொன்னம்பலத்தைக் குடும்பத்தோடு ஊரைவிட்டே தள்ளி வைப்பது எனபது, அவரை அவமானப்படுத்தவோ, அவருக்கு அநீதி இழைக்கவோ அல்ல.மாறாக, தான் செய்த தவறை அவர் உணரவேண்டும் என்பதற்கும், அவரோ அல்லது பிறரோ மீண்டும் அந்த தவறைச்  செய்துவிடக் கூடாது என்பதற்கு ஒரு பாடமாகவே பொன்னம்பலம் குடும்பம் புறக்கணிக்கப்பட்டதைத் திரைப்படத்தில் பார்த்தோம். ’ஈழ தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசுக்கு கொடுக்கும் தண்டனை, உலகில் தன் சொந்த மக்களோடு போராடும் மற்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்’ என பாகிசுதானில் இருந்து வெளிவரும் ’”டான்’ (விடியல்)” என்னும் நாளேடு குரல் கொடுத்திருக்கிறது.
இயற்கை சீரழிவால் ஒருநாட்டின் நிதியோ, நிர்வாகத் திறனோ பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உதவுவது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது ஓர் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. தமிழர்களுக்கு உதவ அந்த நாட்டிடம் பணமோ நிர்வாக வசதியோ இல்லாமலா இருக்கிறார்கள்? போருக்காக பல நூறு கோடி செலவழிக்கும் நாட்டில், புதிதாக பல படைவீரர்களை இணைக்கும் நாட்டில், இவர்கள் சென்றுதான் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலைமை என்பதை எந்த மடையன் ஏற்றுக்கொள்வான். தமிழர்களுக்கு உதவ இவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் அதே நாடு ஏன் உலகத் தொண்டு நிறுவனங்களையோ, ஐ.நா-வையோ அனுமதிக்க மறுக்கிறது எனும் எளிய காரணத்தைக் கூட உணர மறுக்கின்றார்கள் இவர்கள்.
சரி. இப்போது நிகழ் உலக சரத்குமாருக்கு வருவோம்.
இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொண்டு வந்துள்ளார். இவர்கள் குடும்பத்தின் வணிகப்பின்புலனும், இவரின் மனைவி இராதிகா சிங்கள வழித்தோன்றல் என்பதும் முதன்மையான காரணம். சிங்கள அரசின் அறிவிக்கப்படாதத் தூதுவர்களாகச் செயல்படும் இவர்கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு நற்பெயர் வாங்கப் பாடுபடுவதோடு, நடிகை அசினுக்கு விதிக்கப்படும் தடை, நாளை தங்களுடைய சின்னத்திரை இரேடான் நிறுவனத்திற்கும் வரும் என்பதாலும், அசினுக்கு சார்பாக செயல்படுகிறார். இவருக்குத் துணையாக தன் நடிகர் சங்கத் தலைவர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் பார்க்கிறார். இதன் மூலம் இவர் அடைய கருதும் நன்மைகள் IIFA வால் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியை வெற்றிமுகமாக்குவது, தமிழ்த்திரையுலகத் தடையைச் செல்லாக்காசாக்குவது, சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது கருணையோடு செயல்படுவதாக உலகிற்கு வெளிப்படுத்தல் எனப் பற்பல.
தொழில்தொடர்பு என்பதையும் மீறி, நினைத்தபோதெல்லாம் வானூர்தி பிடித்து கொழும்பு சென்று சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் தங்கும் அளவிற்கு இவர்களுக்கு நெருக்கம் உண்டு. கணவன் மனைவி இருவருமே, நாம் அனைவரும் தெருவில் நின்று கொண்டு  போரை நிறுத்த கோரியிருந்த வேளையிலே, போர் நிறுத்தப்படக் கூடாது எனத் தீவிரமாக வேலை பார்த்தார்கள். மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட உறுப்பினர் ஒருவர் இலங்கை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தன் சங்க நிர்வாகிகளுக்குள் போர் அவலம் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்த்திருந்தார். இதை காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியப்படுத்தி அதை நடக்கவிடாது தடுக்க முயன்றார் சரத்குமார். இதனால் அவருக்கும், சரத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை திரையுலகமே அறியும் என்றாலும், இம்முறை பல நடிகர்கள் இவரோடு இணையும் அபாயம் உள்ளது. ஏனெனில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இவரைப் பிடியில் வைத்துக்கொள்ள முதல்வர் கருணாநிதியும் முண்டுகொடுப்பதாக தெரிகிறது.
இவர் இப்படியென்றால், இவர் மனைவி இராதிகா, அனைத்துக் கட்சியினரும் தலைமை அமைச்சரைக் கண்டு போரைநிறுத்த முறையிட தில்லிக்கு சென்றபோது, சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சென்றவர்,  நம் அனைவரின் உணர்வுக்கும் எதிராக, ஈழத்தமிழ்கள் கொன்று குவிக்கப்பட்டப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வாதிட்டவர். இங்கிருந்து போன அனைவரும் போரை நிறுத்தவே கோரிக்கை வைத்ததாகக் கருதிய அப்பாவிகளில் நானும் ஒருவன். திரையுலகம் கொண்டு வந்த  IIFA தடைக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவருக்கும் நீதி, மனித உரிமைகளைவிடவும், தங்கள் வருவாயே முதன்மையானது. குழம்பியகுட்டையில் மீன்பிடிப்பவர்கள் இவர்கள் என யாரும் கருத வேண்டாம், தேவைபட்டால் குட்டையையும் குழப்பக்கூடியவர்கள். போர் உச்சமடைந்த காலத்தில் நாளும் பல நூறு மக்கள் கொல்லப்பட்ட பொழுதும், மூன்று இலட்சம் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த பொழுதும் மக்களை பற்றி கவலைப்படாத இவர்கள், இன்று தாம் சிங்கள் அரசுடன் உறவாடுவதால் எங்கே தங்கள் திரைப்பட எதிர்காலம் தமிழகத்திலும், புலம் பெயர் தமிழர்களிடத்தும் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று அஞ்சி சிங்கள அரசின் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அடிமையாக இருக்கும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யப் புறப்படுகின்றனர்.
இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவது போல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், சிங்கள அரசு எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை ஊடகங்களில் படித்துக் கொண்டும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளிலிருந்து மீட்க நடக்கும்  முயற்சிகளை மழுங்கடித்து,  நீதிக்காகப் போராடி வருபவர்களைக் கோமாளிகளாக உலத்தின் முன்பு நிறுத்த முயல்கின்றனர்.
(வவுனியாவில்இராசபக்சே மனைவியுடன் நடிகை அசின்)
IIFA விழா தோல்வியில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகின்றது.  இதைக் கண்டித்தத்   தமிழுணர்வாளர்கள்  சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நேரம் பார்த்து, திட்டமிட்டு இவர்கள் செயல்படுகின்றார்கள். தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையைச் செய்தும், நம் தாயகக் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வரும் நூற்றுக்கணக்கான நம் மீனவர்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொன்று வரும் இலங்கை அரசின் இனவெறி முகம், டப்ளின் தீர்பாயத்தின் தீர்ப்பு, GSP+ சலுகை இரத்து போன்றவை மூலம் உலக மக்களுக்கு தெரியவரும் வேளையில், மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் இலங்கையை உலகிற்கு அமைதி நிலவும் நாடு என்று சொல்லத் துடிக்கின்றனர் இந்த நடிகர்கள்.
சாதாரணத் தமிழர்கள் காசு கொடுத்து படம் பார்த்ததால் தான்  பணக்காரர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாறிப்போன இவர்கள்,  இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து  நீதிக்கானப் போராட்டத்தை மலிவாக்க முயல்கின்றனர்.
நம்மாலான வரையில் இதுபோன்றவர்களை எச்சரிப்பதோடு, இவர்களின் அனைத்து படங்களையும், தொலைகாட்சித் தொடர்களையும், அனைத்து தளத்திலும் புறக்கணிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு இங்கு வாழ்வது எளிதல்ல எனப் புரிய வைக்க வேண்டும். அதுவே, இனி சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட இருக்கும் எல்லாத் துறையினருக்கும் பாடமாக அமையும்.
தமிழுணர்வாளர்களை ஆழம்பார்க்கவும், எதிர்ப்புக் குறைவாகவிருந்தால் அதை  பயன்படுத்தவும் பல வழிகளில் வேலை நடக்கின்றது. நாம் விழிப்போடு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
இறுதியாக சில: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுபவர்களை ஏன் எதிர்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு:
இன்று இவர்கள் உதவி செய்யப் போகும் இடம், வெள்ளத்தினாலோ, பூகம்பத்தினாலோ பாதிக்கப்பட்ட ஒரு இடம் அல்ல. ஆப்பிரிக்க நாடான சூடானில் நடந்ததைப் போல் மிகக் கொடூரமாக, சாட்சியமின்றி நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை நடந்த இடத்திற்கு செல்கின்றனர். இன்று இவர்கள் ஏறி மிதித்தவர்களோடு(சிங்கள அரசோடு) கைகோர்த்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போல் பாவனை செய்வதற்கு மாறாக , ஐ நா சபையின் சார்பாக ‘குட் வில்’ தூதராக  சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ  அமெரிக்க நடிகை ஏஞ்சலினா சோலி(சால்ட் பட நாயகி) சூடான் சென்றிருந்தார்.
களத்தில் தங்கி தன்னால் ஆன உதவிகளை அம்மக்களுக்கு செய்து விட்டு அவர் மேலும் ஒரு காரியத்தை செய்தார். “இந்த மக்களுக்கு எதிராக நடந்தது போர் குற்றம், இவர்கள் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை.
இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்று உலக அரங்கில் நீதிக்காக குரல் கொடுத்தார். அவர் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ‘டார்ஃபர் மக்களுக்கு நீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இச்சுட்டியில் காண்க.
இன்று போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு போகும் சரத்குமார், அசின், சல்மான் கான், விவேக் ஓபராய் அல்லது இனி செல்லவிருக்கும் யாராகட்டும், அங்கு இலங்கையில் குண்டு போட்டு தகர்க்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கோயில்கள், எண்ணற்ற மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டு அங்கு நடந்தது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று நீதிக்காகக் குரல் கொடுப்பார்களா?
’திரைத்துறையினரை மட்டும் ஏன் இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என வற்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு.
திரைத்துறையினர் தவிர விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று எல்லோரையும் அணுகி இலங்கை அரசைப் புறக்கணிக்கச் சொல்ல வேண்டும். ஆனால், திரைப்படத்துறைக்கும் மக்களுக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது. பலப் பத்தாண்டுகளாகத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் திரைப்பட மோகம், இதுவரை பல நடிகர்களைத் தமிழகத்தின் பல அரசியல் பதவிகளில் அமர்த்தியுள்ளது.  நாளை கூட புதிதாய் ஒரு நடிகர் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்துவிட்டு, மக்களுக்கு சமுதாய அக்கறையுடன் சில கருத்துக்களைக் கூறி உதவிகளையும் செய்தால், அவரும் அடுத்த தேர்தலில் நிற்பார். இது தமிழனின் பலவீனமாகக் கூட இருக்கலாம். ஆனால்  இந்த வாய்ப்பு திரைப்படத்துறையினரை தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை.  தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தமிழன்  முதல் புலம்பெயர்ந்து நாட்டில் அரை கோடி ஊதியம் வாங்கும் தமிழன் வரை தமிழர்களைத் தமிழுடன் இணைய வைப்பதில் தமிழ்த் திரைத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இவர்கள் தங்கள் ஊதியம் குறைவானாலும் ஒவ்வொரு மாதமும் திரைப்படங்களுக்கும் ஒரு தொகையைச் செலவிடுகின்றனர். மக்களுக்கும், தமக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது, விலை பேச முடியாதது என்பதை உணர்ந்தே பல மறைந்த, வாழும் நடிகர்கள் இம்மக்களுக்கு  அநீதி இழைக்கப்படும் பொழுது, “உடுக்கை இழந்தவன் கை போல” ஒற்றுமையுடன் குரல் கொடுக்கின்றனர்.இவர் நமக்காக பேசக் கூடியவர் என்று ஓவ்வொரு வீட்டிலும் காலத்திற்கும் மதிக்கின்றனர் ( நடிகவேள். எம். ஆர்.ராதா,போன்றோர்). நமக்கு அநீதி இழைக்க முயல்பவர்கள் நம் நெஞ்சங்களில் இருந்து மறக்கடிக்கப்படுகின்றனர்.
தமிழினத்தை ஈழத்திலும், தமிழகக் கடற்கரை கிராமங்களிலும் அழித்து வரும் பேரினவாத சிங்கள அரசுடன் கைகோர்க்கச் செல்லும் நடிகர்கள் இதை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்காவிடில்,  நீதிக்காக மன்றாடிவரும்   தமிழினத்தால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளட்டும்.
மறத்தமிழன்
தமிழ் நாடு

Monday, July 26, 2010

ஆதிச்சநல்லூர் - தமிழனின் வரலாறு!





வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!

2010 – மார்ச் மூன்றாவது வாரம்…..
”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?
இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.
தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”
-    பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.
24-03-2010 – பாளையங்கோட்டை.
”எங்கள் அன்பிற்குரிய ”தொ.ப” அவர்களே…… உங்களது இந்த உணர்வுதான் எங்களை இங்கு வரவைத்திருக்கிறது. நீங்கள் மட்டுமில்லை நாங்களும் கலந்து கொள்ளப்போவதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இங்கு வந்து உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து தமிழ் கற்றுக்கொள்வோமே ஒழிய….. ஒருபோதும் அங்கிருக்க மாட்டோம்…..” என்று அன்று அவரது மணிவிழாவில்  பேசியபடி செம்மொழி மாநாட்டுத் துவக்க விழாவன்று கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தோம் நாங்கள். இது ஒரு நூதன நாடுகடத்தல். ஆம்….. வேறு வகையில் சொல்வதானால் தன்னைத் தானே நாடு கடத்திக் கொள்வது.(Self Deportatation). எங்கள் வாகனம் கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் “உடன்பிறப்புகளது” எண்ணற்ற வாகனங்கள் செம்மொழியைச் “செழுமைப்படுத்த” ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தன.
முதல் பொழுது…… செயல்படாத தமிழ்ச்சங்கம் இருக்கும் மதுரையில் கழிய மறுநாள் பயணமானோம் தோழன் தொ.ப.வின் திசை நோக்கி திருநெல்வேலிக்கு. வழக்கமாக இலக்கிய சங்கமம் நிகழும் தெற்கு பஜார் சாலையின் தேநீர்க்கடையில் நண்பர்களோடு தேநீர் சாப்பிடலாம் என காலை வைத்தால்……
“என்னது…. மேடையில் சொன்னமாதிரியே  வந்துட்டீக…..?” என ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் சாலையில் புத்தகக்கடை வைத்திருக்கும் தோழர்.
மேடையில் ஒன்று…… மேடையை விட்டிறங்கினால் மற்றொன்று…… என பார்த்துப் பார்த்துச் சலித்த பூமியாயிற்றே இது. பாவம் அவர் என்ன செய்வார் அதற்கு?
வீட்டினுள் நுழையும்போது.தமிழிசையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் மம்முது அவர்களின் “தமிழிசைப் பேரகராதி” என்கிற நூலை வாசித்துக் கொண்டிருந்தார் தொ.பரமசிவன்.
எங்கள் பேச்சு எது பல்லவி? எது அனுபல்லவி? அனுராகம் என்பது எது? என்கிற திசையில் நகரத் தொடங்கியது.
உடன் வந்த நண்பர் “அனு” என்றால் என்ன? என்று கேட்க….. ”அனு” என்றால் ”தொட்டடுத்து வருவது” என்றார் தொ.ப. நமக்குத் தெரிந்ததெல்லாம்….. அனுபல்லவி தியேட்டரும்…… நடிகை அனுராதாவும்தான்.
இந்தித் திணிப்பிற்கெதிராக குரல் கொடுத்த பரவஸ்த ராஜகோபாலாச்சாரியார் யார்?
”அபிதகுஜலாம்பாள்” என்பதற்கான அர்த்தம் என்ன?
திராவிட இனத்துக்காக டி.எம்.நாயர் ஆற்றிய பங்குகள் என்னென்ன?
மருதநாயகம் என்றழைக்கப்படும் கான்சாகிப் குறித்து சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் எவையெவை?
என எண்ணற்ற விஷயங்கள் வந்து விழ விழ மண்டையே சூடாகிப் போனது.
பேச்சு “ஆதிச்சநல்லூர்” பக்கம் திசை மாற…… அதென்ன ஆதிச்ச நல்லூர்? அங்கென்ன இருக்கிறது? என்றேன். சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் என்னை ஏற இறங்கப் பார்த்தது. நான் தான் அறியாமைக்கென்றே அவதாரம் எடுத்தவனாயிற்றே….. அப்புறம் எப்படிப் புரியும் அதெல்லாம்?
”தொ.ப.” சிரித்துக் கொண்டே…. ”நாளை நாம் நேரிலேயே போய் பார்க்கலாம்… ஆதிச்சநல்லூரைப் பற்றி அங்கு வைத்தே விளக்கிச் சொல்கிறேன்.” என்றார்.
கோவையில் இருந்து சென்ற நண்பர்களோடு திருநெல்வேலி தோழர்களும் இணைந்து கொள்ள அங்கிருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் பயணம். சாலையின் ஓரத்தில் தெரியும் ஒரு பொட்டல் காட்டில் வண்டியை நிறுத்தச் சொல்கிறார் ”தொ.ப.”
“இதுதான் ஆதிச்ச நல்லூர்”
இதென்ன சுடுகாடு மாதிரி இருக்கிறது…… இதைப்போய்….. என்று நண்பர்கள் இழுக்க…..
“உண்மைதான். ஆனால் இது இடுகாடு. ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இதுதான்” என்கிறார் அந்த பொட்டல் வெளியைக் காட்டி.
ஒன்றும் புரியாமல் முழித்தவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம் வாங்க….” என முன்னே செல்கிறார் தொ.ப.
ஏறக்குறைய இருபது அடி கூட நடந்திருக்க மாட்டோம்…… காலுக்குக் கீழே சிதில் சிதிலாய் ஓடுகள்…… சில கறுப்பில்…. சில சிவப்பில்…..
“இதுதான் அந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மிச்சம்….. அதோ அதன் வாய்ப் பகுதி….. எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்…….” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக வியப்பில் பிரமித்துப் போய் நிற்கிறோம் நாங்கள்.
ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.
”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம்  மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு  நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.
உடன் வந்த மற்றொரு நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்குகிறார்.
“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்” என முடிக்க…..
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என எல்லோரும் கும்பலாய் குரல் கொடுக்க……
“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.
”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”
அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.
அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.
”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.
“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.
சரி….இங்கு  எடுத்துச் சென்ற பொருட்களையெல்லாம் இங்கேயே கொண்டு வந்து சேர்த்து ஒரு அருங்காட்சியகமாவது வைக்கலாமே… என்றேன்.
”அருங்காட்சியகமும் வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழனின் வரலாறு வெளியே வரட்டும். அதுவும் உலக வரலாறுகளையே புரட்டிப்போட இருக்கிற உண்மையான வரலாறு.”என்றார் அழுத்தம்திருத்தமாக.
யார் இதைச் செய்ய வேண்டியது?
”மத்திய அரசு.”
அதைச் செய்யவைப்பது?
”மாநில அரசு.”
துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத்தானே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?.
சிரிக்கத் தொடங்கினோம் நாங்கள்.
எல்லாம் முடிந்து வண்டியில் ஏறும் போது மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன் பொட்டல் காட்டை.
இப்போது அது பொட்டல் காடாய்த் தெரியவில்லை எனக்கு.
Excavations - Adichchanallur
Adichchanallur, An Iron Age Urn Burial Site
Adichchanallur (8° 37’ 47.6" N; 77° 52’ 34.9"E) is located on the right bank of the Tambraparani River, in the Tuticorin District of Tamil Nadu. The extensive urn burial site at Adichchanallur in Tuticorin District (formerly Tirunelveli) was first discovered by Dr. Jagor of Berlin Museum in 1876. A. Rea excavated a good number of urns during 1910s and discovered gold diadems with parallels from Mycenae; bronze objects notably lids with exquisite finials depicting many animal forms, iron objects besides thousands of potsherds. The excavation was resumed during 2003-04 and 2004-05. More than 160 urns within the area of 600 square meters have been exposed.

General View of the Excavatede Trenches with urn burials in Situ, Adichchanallur
The burials have been classified into three phases, viz., Phase I, II and III. Phase I contains predominantly primary burials, while in Phases II & III, both primary and secondary burials are found.


General View of the Excavated Trenches with urn burials in Situ, Adichchanallur

The skeletal remains inside the urns are invariably placed in crouched position. No orientation seems to have been followed. There are two examples of double burial. A potsherd with appliquénarrative scene is an important find. It 



depicts a slim and tall woman standing near by plantain tree. An egret is shown sitting on the tree and holding a fish. A deer and alligator are also depicted near the woman. Good number of graffiti on pottery has been discovered.



Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur

Pottery types include black and red ware, red ware and black ware. The dominant shapes include bowls, dishes, vases etc. Some of the pots are painted in white. Iron implements like arrowheads, spearheads and axe are found, but eroded and badly preserved. Few copper ornaments have also been found. Husk and cloth impression has been found on one of the Iron sword. A potter’s kiln was also exposed in the habitational site.

Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur


Contents of an Urn burial: Remains of rice husk, Adichchanallur

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்

நன்றி:குமரிக்கண்டம் வலைப்பூ நன்றி:நக்கீரன்இணையதளம்                                                                      வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர். 

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity) இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய். இந்திய ரூபாய் குறியிட்டின் நோக்கம்இந்திய ரூபாய் நோட்டிற்கு புது குறியீட்டை மந்திரிசபையும் அனுமதித்து விட்டதாம். பேரம் பேசி மந்திரி பதவி வாங்கிய தமிழக மந்திரிகள் இந்தி திணிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லை போலும். எப்படி தெரியும் பேரம் பேசி சோரம் போனவர்கள் தானே.இந்த புது குறியீட்டின் அர்த்தம் என்று மூன்று விசயங்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

1."र" என்ற இந்த எழுத்து, தேவநாகரி எழுத்துவடிவம்.
2.மேலே உள்ள கோடு தேவநாகரியில் சிர்ரேகா என்ற தலமை கோடு ஆகும்
3.அதற்கு அடுத்து இடைவெளிவிட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள கோடு மேல் கோடு, இடைவெளி அனைத்தும் சேர்த்து மூவர்ணகொடியை குறிக்கிறதாம்.

தேவநாகரி எழுத்து என்று சொல்லும் "र" எழுத்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ஹிந்தி எழுத்து. சமஸ்கிருதத்திலும் இதே எழுத்து தான் குறிக்கப்படுகிறது.. இதன் ஒலி தமிழில் "ர"வை ஒத்து வரும். இந்தியாவின் இறையாண்மை அனைத்து மக்களையும் அனைத்து சமூகத்தை காப்பாற்றுவதாக சொல்லும் பொழுது. ஒரு சில மொழிகளில் மட்டும் வரும் எழுத்தை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாமா. 

ஏற்கனவே ஒருத்தர் கேள்வி எழுப்பினார், முதல் மூன்று மொழிகள் என்று சொல்லி. இந்திய தற்போதைய ரூபாய் நோட்டை எடுத்து பார்த்திர்கள் என்றால் அந்த ரூபாய் நோட்டின் மதிப்பை ஒரு பகுதியில் பதினைந்து மொழிகளில் பதிந்து இருப்பார்கள். இப்படி அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்திய ரூபாயை குறிக்க ஒரு சில மொழிகள் பயன்படுத்தும்(வடமொழிகள்) எழுத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கலாமா??

இரண்டவதாக சொல்லி உள்ளதும் தேவநாகரி எழுத்தில் தலைமை வரி கோட்டை குறிப்பிடுகிறார்கள்.. ஹிந்தி யில் கடிதம் எழுதும் பொழுதோ இல்லை ஒரு பத்தியாக எழுதும் பொழுதோ இந்த கோட்டை பயன்படுத்துவதில்லை. ஆனால் ஹிந்தி படிக்க ஆரம்பிக்கும் பொழுது அதாவது தமிழில் அரிச்சுவடி இருப்பது போல் அங்கும் உண்டு. அதில் கோட்டுடன் எழுதத்தான் சொல்லி கொடுப்பார்கள். ஹிந்தி பேப்பர்கள் அனைத்திலும் பார்த்தால் கோட்டுடன் தான் இருக்கும். ஹிந்திக்கு இதற்கும் சம்பந்தமில்லை தேவநாகரி தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். 

எனென்றால் இன்று வரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவு தேவநாகரி, கிரந்த எழுத்துகள் போன்றவைதான் பழமையானது என்று முடிவுக்கு வந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் அகல்வராய்ச்சி 2005ம் ஆண்டு நடந்தது இன்று வரை அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை (அந்த இடத்தை பாதுகாப்பன பகுதியாக அறிவித்து வேறு யாரையும் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று தடை விதித்துள்ளனர்). இந்த மொழிகளில் இருந்து தான் அனைத்தும் தோன்றியது என்பது தான் ஆராய்ச்சிகளின் முடிவு. சம்ஸ்கிருதம் தான் முதல் மொழி என்பதை நிலைப்படுத்தவே இந்த குறியீட்டு விளையாட்டு. 

அடுத்து மூவர்ணகொடியை குறிக்க இரண்டு கோடுகளும் அதன் நடுவில் உள்ள இடைவெளியாம். மூவர்ண கொடியை குறிக்க கருப்பு கோடுகள். கருப்பு என்பது துக்கத்தை குறிக்க தானே??? சின்ன சந்தேகம் ஹி ஹி ஹி இதைப் பற்றி நான் பேசவேண்டாம் இந்திய தேசியவாதிகள் பேசிகொள்ளட்டும். 

ஒரு நாட்டில் அனைத்து மக்களும் பயன் படுத்தும் பணத்தின் குறியீடு அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்படி ஒன்றை வைக்கும் பொழுது அதை ஆதரிக்கலாம். 

இப்படி எழுதுவதால் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு ஹிந்தி எழுதப் படிக்க பேசத் தெரியும். அனைத்து மொழிகளையும் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே என் வாதம். ஆனால் அது கட்டயமாக திணிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. 

கடைசி தகவல் ராண்டி என்னும் இந்தி சொல் இதே எழுத்தில் தான் ஆரம்பிக்கும், அதன் தமிழ் அர்த்தம் விலைமாது. பணமும் கைக்கு கை மாறுவதால் இந்த எழுத்தை தேர்ந்து எடுத்து இருப்பாரோ உதயக்குமார்.                                                                                                             கருத்துக்கள் [24]

Date :7/22/2010 4:34:31 PM
700 Km சிங்கப்பூரில் தமிழும் ஒரு அரச மொழி.
Name : thamizhDate :7/22/2010 4:27:23 PM
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முதல் பக்கமே "இந்திய ஒரு ஒன்றியம்" என்று தான் குறிபிடுகிறது ஆம் இங்கு நாம் தமிழன்,கன்னடன்,தெலுங்கன் என தேசிய இனமாக உள்ளோம் இந்தியாவில் குடியுரிமை பெற்று உள்ளோம் இந்தியன் என்று ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை (ஆதாரம் முரசொலி மாறன் எழுதிய "மாநில சுயாட்சி& ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" நூல்கள்) நாம் தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் ரூபாய் குறியீட்டின் வழி ஹிந்தி ஆதிக்கத்தையும், மாற்று தேசிய இன மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் ஆக்கும் இந்த அராஜக போக்கை கண்டிப்போம் இது தமிழர்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஹிந்தி தவிர்த்த அத்தனை தேசிய இன மக்களையும் கொச்சைபடுத்தும் செயல் "ஒரு இனத்தை அழிக்க முதலில் அதன் மொழியை அழி"-என்பது பாசிச ஹிட்லர் வெறி அதை செய்து இந்திய மையா அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டிக்க அணைத்து தேசிய இன மக்களே கைகோருங்கள். "இந்திய தேசிய இனங்களின் சிறைக்கூடம்"
Name : RADJY NirmalDate :7/22/2010 1:33:12 PM
நம்ம நாட்டுக்கு என்று ஒரு மொழி தேவை அது என்ன இந்தியாக இருக்ககூடாது. இன்னும் தமிழனை மொழி மொழி என்று சொல்லி கொண்டு அவனை முன்னேற விடாமல் தயவு செய்து தடுக்காதீங்க. வேற வேலை இருதா பாருங்க... தமிழ் மட்டும் தெரிந்ததால் பாதிக்கபட்டோர் சங்கம் ..
Name : Ranga NathanDate :7/21/2010 1:27:46 PM
இது ஒன்றும் புதியது இல்லை. தமிழன் மானத்தோடு வாழ ஓர் ஊர் இல்லை. நீங்கள் ஒன்றும் செய்யபோவதும் இல்லை. உங்கள்ளால் அது முடியாதது. ஹிந்தியை படியுங்கள்.
Name : sajithDate :7/21/2010 10:19:44 AM
போங்கடே ஓங்க தமிழும் .................ம்,நாம் இந்தியா வில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்
Name : sailashDate :7/19/2010 10:45:36 PM
சரி பல மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில் ஒரு மொழியில் அதாவதி ஹிந்தியில் இருக்க கூடாது !! அப்போ எந்த மொழியில் இருக்கலாம் ?? ஆங்கிலத்திலா ?? இந்தியாவில் ஹிந்தி தெரிதவர்களை விட ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமா ?? என்ன கொடுமை ?? அது எப்பை ஆங்கிலத்தை ஒத்து கொள்ளும் பகுத்தறிவு கூட்டம் , ஹிந்தியை மட்டும் எதிர்கிறது !! அது சரி ஆங்கிலேயேன் தானே வெளியே போனான் , அடிமைத்தனம் இன்னும் இருக்கிறதே !
Name : ParthaDate :7/19/2010 9:10:59 PM
அவமானம். அவமானம், ஒரு தி. மு. க. குடும்ப தமிழன் ஹிந்தி மொழி சின்னத்தை உருவாக்கியது. அதை தமிழக மத்திய மந்திரிகள் தேர்வு செய்ய உதவியது பெரும் தொரகம். இவர்கள் பார்பன செயலாளர்களின் யோசனை படி செயல் பட்டனரோ? பார்பனர்கள் ஒழிக. ஹிந்தி ஒழிக.
Name : அன்பன்Date :7/19/2010 5:42:26 PM
தன்மானம் இல்லாத தமிழனிடம் என்ன சொன்னாலும் அவன் சட்டை செய்ய போவதில்லை. இனி தமிழ் மெல்ல சாகும்! மிக்க வருத்தங்களுடன்
Name : mannanDate :7/19/2010 11:53:57 AM
அருமையான கட்டுரை . வாழ்த்துகள்
Name : ManithanDate :7/19/2010 11:52:35 AM
தன்மானம் இல்லாத தமிழர்களாய் போய்விட்டோம் . இங்கு கமெண்ட் எழுதி இருக்கும் வாசகர்களை பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் ஹிந்திக்கு விலை போகவிட்டார்கள். இவர்களின் பிள்ளைகல்லுக்கு கூட இவர்கள் தமிழ் சொல்லி கொடுபதில்லை. ஹிந்தி பெயர்களை தான் வைகிறார்கள் . பணத்திற்காக ஹிந்தியை படி என்று சொல்லுகிறார்கள் . ஹிந்தி படித்து வெளி நாட்டில் எந்த வேலையும் செய்ய போவதில்லை . வெளி நாட்டில் ஹிந்தி அவசியமும் இல்லை . தமிழ்நாட்டில் வேலை பார்த்தாலே போதும் . இவன் டெல்லிக்கு போய் என்ன செய்யப்போகிறான். என் சிங்களவனை ஹிந்தி படிக்க சொல்லுங்கள் . அவன் செருப்பால் அடிப்பான். அப்படிதான் தமிழனும் . நமக்கு மொழி பற்று இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஜப்பானியர் ஒரு உதாரணம் . முதலில் நம் தாய் மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் . பிறகு அந்நிய மொழியான இந்தியை கற்காலம் . ஆங்கிலமும் தாய் மொழி தமிழுமே நமக்கு போதும் தரணியை ஆள்வதற்கு
Name : pakutharivuDate :7/18/2010 5:39:18 PM
திருவாளர் தறுதலை எழுதியதை நம்பவேண்டாம். அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு பார்ப்பன அடிவருடி. தன்னை ஒரு பார்ப்பனுக்கு நிகரான பார்பான் என்று பெருமையடித்து கொள்பவர். சமூக நீதிக்கான இடஒதுகீடுக்கு எதிரானவர். இவரைப்பற்றி மேலும் அரிய www.tamilnadutalk.com போய் பார்க்கவும்.
Name : Speak HindiDate :7/18/2010 5:09:22 PM
இதுல என்ன தவறு இருகின்றது என்று தெரியவில்லை ஒவ்வரு தமிழனும் கண்டிப்பாக ஹிந்தி படிக்கணும் இல்லேன்னா நம்மளால் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கூட தாண்ட முடியாது வெளி நாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு பாருங்கள் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் கூட ஹிந்தி பேசுகிறார்கள் தமிழனால் முடியல நீ இந்தியனா என்று கேவலமா கேக்குறான்.அரசியல் இலாபத்திற்காக தமிழன் மற்றவர்களிடம் கேவல பட வைகிறார்கள்
Name : canadianDate :7/18/2010 6:36:54 AM
மேல் கூறிய மற்றைய நாணயங்கள் உலக புகழ் பெற்றவை. இந்த குப்பையை எங்கு கொட்டுவீர்கள்?தன்இனத்தை விற்று பிழைப்பதில் தமிழன் தமிழன்தான்
Name : abcdDate :7/17/2010 9:19:14 PM
உங்களுக்கு வருத்தமாக இருந்தால், தமிழ் நாட்டிற்குள் புதியதாக நோட்டு அடித்து அதில் தமிழ் மொழி குறியீடு பயன்படுத்துங்கள் .. .. என்னடா இடுலக்கூட மொழிப் பிரச்சனைய கெளப்புறீங்க.. போங்கடா.. பொய் புள்ள குட்டிய படிக்க வெய்யுங்க.. அவிங்க எதிர்காலத்துக்காவது உதவியா இருங்க.. வேலை வெட்டி இல்லாம வெட்டி பிரச்சனைய கெளப்பாதீங்க..
Name : muruganandhamDate :7/17/2010 9:12:09 PM
எப்போது மாறும் இந்த ஹிந்தி எதிர்ப்பு ,இதனால் வில்லைத நன்மை என்ன?நம் பிள்ளைகள் பலர் மத்திய அரசு வேலை வாய்புகள் இல்லாமல் போனது,ஏன் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஹிந்தி படிகிறார்கள்,அதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன த்ய்ரியுமா?சீனாவில் எத்தனை மொழிகள் உள்ளனன தேரியுமா?அனால் அவர்கள் மண்டரின் அரசு மொழி?ப்ளீஸ் இந்தியனாக இறுங்கள் மொளிவேருபடுகளை மறந்து நாம் அன்னை வரும் இந்த்யர்கள் என்ற உணர்வுடு இர்ருகவும் ,இதை என்னை போன்று வெளி நாடுகளில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள் ஜெய் ஹிந்த்
Name : manuDate :7/17/2010 3:20:22 PM
இது இந்தியனுக்கு தமிழன் வடித்தகுரியீடு தமிழனுக்கு அவன் பணத்துக்குமான குறியீடும் ஒரு நாள் வராமலா போகப்போகின்றது.
Name : தறுதலைDate :7/17/2010 1:40:56 PM
ஸ்ரீநிவாசன் அவர்களே, நான் இந்தியில் பிரேவேசிகா வரை படித்தவன். தாங்கள் சொல்வதையே தான் நானும் சொல்லுகிறேன். ஆனால் பல மொழி பேசும் நாட்டின் பணத்தை குறிக்கும் இலட்சினை ஒருமொழியை சார்ந்து இருக்க கூடாது என்பதே என் வாதம். "ஒரு மனிதனுக்கு எத்தனை மொழிகள் தெரியும் அவன் அத்தனை மனிதர்களுக்கு சமமானவன்"
Name : தறுதலைDate :7/17/2010 1:37:17 PM
நக்கீரனுக்கு நன்றி, இதை பற்றிய எனது இரண்டாவது விரிவான பதிவையும் இட்டுள்ளேன். இந்த முதல் பதிவு செய்தியை கேட்டவுடன் எனது உளக்குமுறல் அவ்வளவே.
Name : தறுதலைDate :7/17/2010 1:36:05 PM
jay இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்று உலகமெல்லாம் கூவிகூவி சொல்லுகிறது. அப்படி சொல்லும் பொழுது அதை கடைபிடிக்கவும் வேண்டும். அதுவே எனது நோக்கம். மும்மொழி கொள்கை எங்கு சென்றது. இல்லை இப்பொழுது உங்கள் சட்டைபையில் இருக்கும் ஒரு ரூபாய் தாளை எடுத்து பாருங்கள் அதில் 15மொழிகளில் அதன் மதிப்பு அச்சடிக்கப்பட்டு இருக்கும். இப்படி இருப்பதை ஏன் தீடிரென்று ஒரு மொழியில் மாற்றுகிறார்கள் என்பதே என் கேள்வி.
Name : Namum TmaliarDate :7/17/2010 7:52:29 AM
first let us save tamils , then tamil will be safe automatically
Name : jayDate :7/16/2010 10:04:30 PM
இது ஒரு குறியீடு. அதுவும் 120 கோடி இந்தியர்களில் நம் தமிழன் செய்த முயற்சி. இந்தியை நாம் வெறுப்பதாக இருந்தால் இந்தக் குறியீட்டை ஆங்கில எழுத்தின் மூலம் என்றே நாம் கொள்ளலாம் தவறில்லை. முற்றிலும் அந்நிய மொழியான ஆங்கிலத்தை அங்கீகரிக்க தயாராகும் நாம் ஏன் இந்திய மொழியின் சாயலில் இருக்கக் கூடாது என்று அடம் பிடிக்க வேண்டும்.குறியீடு என்று அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் பொது அதை மொழி வடிவம்தான் என்று நாம் முரண்டு பிடிக்கத் தேவையில்லை.
Name : M.R.SrinivasanDate :7/16/2010 9:17:48 PM
ofcourse what wrong in this hindi is our india langauage tamilnadu has have is our own tamil. Tamilian must know tamil what ever it is who study in tamilnadu must learn tamil. And also read hindi because if u go beyond tamilnadu we must know hindi we ever u go.u just thing other Tamilnadu all State people know hindi. iam working in dubai even Taxi driver also know that one who does't know hindi he ask our self is a madarsi. And this to bad to us we are going to explan all the people that we coming from Tamilnadu we do't know hindi.So do't separte us Hindi and Tamil. we r all Indians.
Name : IndianDate :7/16/2010 6:39:46 PM
நக்கீரனுக்கு இப்பிடி கொளுத்தி போடறதே வேலை. இத விட்டுட்டு பிள்ளை படிக்க வைங்கயா. சும்மா கப்பி தனமா பேசிகிட்டு.
Name : sakthyDate :7/16/2010 5:34:37 PM
பணம்,பதவிக்காக தமிழன் தமிழனைக் கொல்வான்.இது சமீப காலமாக தமிழர் வாழும் இடங்களில் நடந்து வரும் செயல்களாகும்.ஆரிய ஊடுருவலில் ஆரம்பித்த இந்த செயல்கள் வளர்ந்து கொண்டே வருகிறது.எங்கும் தமிழன் விலை போகிறான்